முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

16 Dec 2025, 3:51 pm
திருச்சி விரைவு செய்திகள்
<p><strong>எம்.எல்.ஏ., கார் மோதிய&nbsp; விபத்தில் விவசாயி பலி</strong></p> <p>தஞ்சாவூர், டிச.16&ndash; &nbsp;தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே, தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ்(50). இவருக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். &nbsp;இந்நிலையில், செவ்வாய்க்கிழமை விவசாய வேலை காரணமாக, வயலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஒரத்தநாட்டில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற, திருவையாறு எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகரனின் கார், கோவிந்தராஜ் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில், கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். &nbsp;இதுகுறித்து, தகவலறிந்த ஒரத்தநாடு காவல்துறையினர், கோவிந்தராஜ் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர். மேலும், காரையும் பறிமுதல் செய்தனர்.</p> <p><strong>நட்சத்திர &nbsp;தமிழன் &nbsp;விருது வழங்கல்</strong></p> <p>பாபநாசம், டிச.16- &nbsp;மக்கள் சமூக பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கலை, விளையாட்டு, சமூக சேவை, மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டவற்றில் சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு விருது வழக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. &nbsp;புதுச்சேரியில் நடந்த விழாவிற்கு சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆரணி ராஜன் தலைமை வகித்தார். நிறுவனர் வினோத் முன்னிலை வகித்தார். &nbsp;பாபநாசம் ஊராட்சி ஒன்றியம், கோவிந்த நாட்டுச்சேரி முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கருக்கு, ஊராட்சியை மேம்படுத்தியதற்காக நட்சத்திர தமிழன் விருது வழங்கப்பட்டது. &nbsp;வன உயிர் அறிவியல் அறிஞர் புபேஷ் குப்தா, புதுச்சேரி சிறைத் துறை சூப்பிரண்டு பாஸ்கரன், ஸ்ரீபெரும்புதூர் கோட்ட வருவாய் அலுவலர் பாலசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram