தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சங்கம் சேரும் உரிமையை மறுக்கும் லாரி நிறுவனம் மாவட்ட ஆட்சியரிடம் சுமைப்பணியாளர்கள் முறையீடு

29 May 2026, 11:11 pm
சங்கம் சேரும் உரிமையை மறுக்கும் லாரி நிறுவனம் மாவட்ட ஆட்சியரிடம் சுமைப்பணியாளர்கள் முறையீடு
<p><strong>சங்கம் சேரும் உரிமையை மறுக்கும் லாரி நிறுவனம் மாவட்ட ஆட்சியரிடம் சுமைப்பணியாளர்கள் முறையீடு</strong></p><p>ஈரோடு, மே 29- சங்கம் சேரும் உரிமையை மறுக்கும் லாரி நிறுவனத்தால். </p><p>தொழில் அமைதி கெடும் என சிஐடியு சுமைப்பணியாளர் சங்கம் ஆட்சி யரிடம் முறையீடு செய்துள்ளது. </p><p>ஈரோடு மாநகரில் விஆர்எல் லாஜிஸ் டிக்ஸ் என்ற லாரி பொருள் போக்குவரத்து நிறுவனம் இயங்கி வருகிறது. </p><p>இதன், புக்கிங் பிரிவில் 8 சுமைப்பணி தொழிலாளர்கள் பணி யாற்றி வந்தனர்.</p><p> சிஐடியு-வில் இணைந்து பணியாற்றி வந்த இவர்களில் 7 பேரை கடந்த 2022 ஆம் ஆண்டு, நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்தது. </p><p>இதில் 4 பேர் தற்காலிக பணி நீக்கத்திற்கு பிழைப்பூதியம் வழங்க வேண்டும் என சட்டப்படி வழக்கு தொடர்ந்த னர். </p><p>வழக்கில் தொழிலாளர்களுக்கு பிழைப் பூதியம் வழங்க வேண்டும் என தொழிலாளர்க ளுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. </p><p>இந்நிலையில், வேறு சங்கத்திற்கு மாறிய 3 தொழிலாளர்கள் மீண்டும் சிஐடியு-வில் இணைந்தனர். </p><p>இதனை ஏற்காத (டிபிடிஎஸ்) சங்கத்தினர் அவர்களை வேலை செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்தனர்.</p><p> தொழி லாளர்களுக்கு இடையிலான பிரச்சனை யால் நிறுவனத்தில் வேலை தடைபடக்கூ டாது என்றும் வேறு கிளை ஆட்களை வைத்து தற்காலிகமாக பணி செய்ய வேண்டும் என்று காவல் துறையினர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. </p><p>இந்நிலை நீடித்து வந்த நிலையில், தொழில் அமைதி கெடும், சட்டம், ஒழுங்கு பிரச்சனையாக மாற வாய்ப்புள் ளதையறிந்து சிஐடியு தரப்பினர் எதிர்வினை யாற்றாமல் அமைதி காத்தனர். </p><p>இந்த நிலை கடந்த ஒரு மாத காலமாக நீடித்து வரும் நிலையில், 4 தொழிலாளர்கள் வேலையின்றி, வருவாயின்றி மிகுந்த இன் னலை எதிர்நோக்கியுள்ளனர். </p><p>வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஏற்ப்பட்ட ஒப் பந்தப்படி 50 ஆண்டுகளாக இருந்து வரும் நடைமுறையை விஆர்எல் நிறுவனம் மீறு கிறது. ஆகவே வேலை நடைமுறை பாது காக்கப்பட வேண்டும். </p><p>பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் மற்றும் காவல் துறையினரிடம் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், சங்க செயலாளர் செந் தில்குமார் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.