காங்கேயத்தில் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தல்
29 Dec 2025, 6:22 pm
<p><strong>காங்கேயத்தில் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தல்</strong></p>
<p>திருப்பூர், டிச. 29 - கவிஞர் ஈரோடு தமிழன்பனின் நினைவேந்தல் நிகழ்ச்சி காங்கேயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. தாராபுரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு புரட்சிகர இளைஞர் முன்னணி தலை வர் கவி தலைமை வகித்தார். இதில் கவிஞர் கவிதா பாரதி, தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.வே.பொன்னை யன் ஆகியோர் கலந்து கொண்டு, கவிஞர் ஈரோடு தமிழன்ப னின் கவிதைகள் குறித்தும், அவருடைய தமிழ் மொழிப் பற்று குறித்தும் எடுத்துரைத்தனர். மேலும், காங்கயம் அகிலன், ஸ்டாலின், சட்டக் கல்லூரி மாணவி ஜென்னி, பெரியாரின் பெண்கள் அமைப்பு நிர்வாகி கனிமொழி ஆகியோர் ஈரோடு தமிழன்பன் இயற்றிய கவிதைக ளின் மாண்பு குறித்து எடுத்துரைத்தனர். பின்னர் கவிஞரின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. கூட்ட நிறைவில் அனை வரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, ஈரோடு தமிழன்பனுக்கு வீரவணக்கம் செலுத்தினர். புரட்சிகர இளைஞர் முன்னணி, பெரியாரின் பெண்கள் அமைப்பை சேர்ந்தோர் பெருந்திர ளாக கலந்து கொண்டனர்.</p>
