தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்டத்திற்கு புறம்பான நீதிமன்ற தீர்ப்பு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

27 May 2026, 11:39 pm
சட்டத்திற்கு புறம்பான நீதிமன்ற தீர்ப்பு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்
<p><strong>சட்டத்திற்கு புறம்பான நீதிமன்ற தீர்ப்பு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்</strong></p><p>ஈரோடு, மே 27- சட்டத்திற்குப் புறம்பான தீர்ப்பினை கண்டித்து, இஸ்லாமிய மக்களின் வழி பாட்டு உரிமையை பாதுகாக்கக்கோரி, தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. </p><p>மத்திய பிரதேச மாநிலம், தார் நகரில் போஜ்சாலா வளாகமும், கமால் மவுலா மசூதியும் இருக்கிறது.</p><p> இங்கு இசுலாமியர் கள் வழிபட்டு வருகின்றனர். </p><p>இந்த மசூதி இந்து கோயில் மீது கட்டப்பட்டது என்று சங்பரிவார் புகார் எழுப்பினர். ஒன்றிய அரசின் 1991ஆம் ஆண்டு சட்டத்தை ஆதாரம் காட்டி 2003ஆம் ஆண்டு தொல்லியல் துறை இசு லாமிய மக்களின் வழிபாட்டு உரிமையை உறுதி செய்தது. </p><p> ஆனால் மத்திய பிரதேச உயர்நீதி மன்றம் இசுலாமியர்கள் உள்ளே வரக்கூடாது என் றும், அந்த இடம் இந்துக்களுக்கு உரியது என்றும் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. </p><p>ஒன் றிய அரசின் 1991ஆம் ஆண்டு சட்டத்திற்கு மாறாக தீர்ப்புகள் மற்றும் முடிவுகள் வந்தால், அது நாட்டில் மிகப்பெரிய குழப்பத்தையும், அமைதியின்மையையும் உண்டாக்கும். எனவே, இஸ்லாமிய மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்கக்கோரி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. </p><p>ஈரோடு ஜவான்பவன் முன்பு செவ்வா யன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிறு பான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் கே.எஸ்.இஸாரத்தலி தலைமை ஏற்றார்.</p><p> இதில், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாநிலக்குழு உறுப்பினர் கே.துரைராஜ், மாவட்ட அமைப்பாளர் சி.முருகேசன் மற்றும் சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்ட செயலாளர் ப.மாரிமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளானோர் பங்கேற் றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.