தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கூலி உயர்வு பேச்சுவார்த்தையை புறக்கணித்த உரிமையாளர்கள் சுமைப்பணி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் துவங்கியது!

10 Jul 2026, 9:24 pm
கூலி உயர்வு பேச்சுவார்த்தையை புறக்கணித்த உரிமையாளர்கள் சுமைப்பணி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் துவங்கியது!
<p><strong>கூலி உயர்வு பேச்சுவார்த்தையை புறக்கணித்த உரிமையாளர்கள் சுமைப்பணி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் துவங்கியது!</strong></p><p>ஈரோடு, ஜூலை 10- கூலி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, ஈரோட்டில் சுமைப் பணி தொழிலாளர்களின் காலவரை யற்ற வேலை நிறுத்தம் வெள்ளி யன்று துவங்கியது. ஈரோடு மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 2 ஆயிரம் சுமைப்பணி தொழிலாளர் கள், நூல் மற்றும் பீஸ் கட்டுகள், பேல், கெமிக்கல்ஸ் ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கான கூலி உயர்வு ஒப் பந்தம் காலாவதியாகி, 16 மாதங் களை கடந்துவிட்டது. ஆயினும் உரிமையாளர்கள் தரப்பில் சுமைப் பணி தொழிலாளர்களின் கோரிக் கையை கண்டு கொள்ளவில்லை. தொழிலாளர் துறை விடுத்த அழைப்பை ஏற்று நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் உரிமையாளர் தரப்பு பங்கேற்ற நிலையிலும், உடன்பாடு ஏற்பட வில்லை. இந்நிலையில், சிஐடியு உள் ளிட்ட தொழிற்சங்கங்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம் அறி வித்தது. இதற்கிடையில் வியாழ னன்று தொழிலாளர் துறை முத்த ரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், சுமைப் பணி தொழிலாளர் சங்கத்தின் கௌரவத் தலைவர் டி.தங்கவேல், பொதுச்செயலாளர் என்.செந்தில் குமார், துணைத்தலைவர் பாப்பா கவுண்டர், எல்பிஎப் கிருஷ்ணன், தங்கமுத்து, மத்திய சங்க விஜய குமார், கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால், உரிமை யாளர்கள் தரப்பினர் பேச்சுவார்த் தையை புறக்கணித்தனர். இந்நி லையில், அறிவித்தபடி வெள்ளி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கியது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.