நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா
10 Jan 2026, 2:48 pm
<p><strong>நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா</strong></p>
<p>திருப்பூர், ஜன.10- திருப்பூர் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத் தில் சமத்துவ பொங்கல் விழா சனியன்று கொண்டாடப்பட் டது. தமிழ் நாடு முழுவதும் வரும் ஜன.14 ஆம் தேதி போகி பண்டிகை, ஜன.15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டா டப்பட உள்ளது. அதன் முன்னோட்டமாக திருப்பூர் காமராஜ் சாலை கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் எதிர் புறம் உள்ள திருப்பூர் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா சனியன்று நடை பெற்றது. திருப்பூர் மாநகராட்சி நகர் நல அலுவலர் முரு கானந்த் தலைமையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழா வில், மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள், செவிலியர் கள், ஆய்வக நுட்புணர்கள் உள்ளிட்டோர் ஒரே மாதிரியான பாரம்பரிய உடை அணிந்து ஆரம்ப சுகாதார நிலைய நுழைவு வாயிலில் வண்ண கோலமிட்டு பொங்கல் வைத்து இயற்கை வழிபாடு நடத்தினர். இதில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறவும், மருந்து மாத்திரைகள் வாங்க வந்த பொது மக்களுக்கு கலந்து கொண்டனர்.</p>
