முந்தய பக்கம்

தக்கலை பகுதியில் எழுச்சிமிகு வரவேற்பு

11 Apr 2026, 5:30 am
தக்கலை பகுதியில் எழுச்சிமிகு வரவேற்பு
<p><strong>தக்கலை பகுதியில் எழுச்சிமிகு வரவேற்பு</strong></p><p>நாகர்கோவில், ஏப்.10- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஓட்டு சேகரிக்கும் வாகன சுற்றுப்பயணத்தை ஏப்ரல் 10 வெள்ளியன்று தொடங்கினார்.</p><p>வேட்பாளருடன் இணைந்து கூட்டணி கட்சியினருடன் இணைந்து திங்கட்கிழமை காலை 10 மணிக்கு பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தக்கலை, குமாரகோவில், முளகுமூடு, புலியூர்க்குறிச்சி, வேர்க்கிளம்பி உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.</p><p>அப்போது அவர் பேசுகையில், பத்மநாபபுரம் தொகுதியில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கவும், தொகுதி மேம்பாட்டிற்காகவும் பாடுபடுவேன் என்று உறுதி அளித்தார். இந்த பிரச்சாரத்தின் போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram