தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

20 Feb 2026, 2:39 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
<p><strong>நகைக்கடை ஊழியரிடம் ரூ.41 லட்சம் வழிப்பறி</strong></p> <p>கோவை, பிப்.20- வாளையாறு அருகே நகைக் கடை ஊழியரை தாக்கி &nbsp;ரூ.41 லட்சத்தை அடையாளம் தெரியாத கும்பல் பறித்துச் &nbsp;சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், பட்டாம்பியை சேர்ந்தவர் லட்சுமனண் &nbsp;(56). இவர் கேரளாவில் உள்ள நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வியாழனன்று காலை லட்சுமனண் தனது இருசக்கர வாகனத்தில் கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்தார். அப்போது அவர் கொண்டு வந்த சுமார் 200 கிராம் தங்க கட்டிகளை கோவையில் விற்றுவிட்டு, ரூ.41 லட்சம் பணத்துடன் மீண் டும் தனது இருசக்கர வாகனத்தில் கேரளா நோக்கிச் சென் றார். அப்போது இருசக்கர வாகனம் வாளையாறு எல்லை &nbsp;அருகே சென்றபோது பின்னால் காரில் வந்த ஆறு &nbsp;பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் லட்சுமனண் &nbsp;வந்த இருசக்கர வாகனத்தை கீழே தள்ளிவிட்டு அவரை காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். மேலும் அவரது இரு சக்கர வாகனத்தையும் எடுத்துச் சென்றனர். பின்னர் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.41 லட்சத்தை பறித்து விட்டு, கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை அருகே &nbsp;காரிலிருந்து லட்சுமனணை இறக்கிவிட்டு, செல்போனை யும் பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதையடுத்து லட் சுமனண் கோவை கே.ஜி.சாவடி போலீசில் புகார் அளித் தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீ சார் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.</p> <p><strong>போக்சோ வழக்கில் இரட்டை ஆயுள்</strong></p> <p>தருமபுரி, பிப். 20- தருமபுரி போக்சோவழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தருமபுரி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தருமபுரி பகுதியை &nbsp;சேர்ந்தவர் பாபு (32). இவர் தனியாக &nbsp;இருந்த 11 வயது சிறுமியை கடந்த 2024-ம் ஆண்டு பாலி யல் வன்கொடுமை &nbsp;செய்துள்ளார். மிரட்டல் விடுக்கப்பட்ட &nbsp;நிலையில், சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இந் நிலையில் சிறுமிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக &nbsp;சிறுமி யின் தாயார் அழைத்து சென்றார். அங்கு மருத்துவர் பரி சோதித்த போது சிறுமி கருவுற்றிருந்தது தெரியவந்தது. இது குறித்து விசாரித்த &nbsp;தருமபுரி அனைத்து மகளிர் போலீ சார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாபுவை &nbsp;கைது செய்தனர். &nbsp;இந்த வழக்கு விசாரணையின் முடிவில் &nbsp;பாபுவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.70 ஆயிரம் &nbsp;அபராதம் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி அசினா பானு &nbsp;தீர்ப்பளித்தார்.</p> <p><strong>சோலையார் அணை நீர்மட்டம்</strong></p> <p>:29.38/160அடி நீர்வரத்து:13.70கனஅடி நீர்திறப்பு:210.00கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:67.48/72அடி நீர்வரத்து:324கனஅடி நீர்திறப்பு:1190கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:81.15/120அடி நீர்வரத்து:178கனஅடி நீர்திறப்பு:799கனஅடி திருமூர்த்தி அணை &nbsp;நீர்மட்டம்:46.02/60அடி &nbsp;நீர்வரத்து:874கனஅடி நீர்திறப்பு:671கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:48.85/90அடி நீர்வரத்து:10கனஅடி நீர்திறப்பு:442கனஅடி</p> <p><strong>ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவர் கைது</strong></p> <p>&nbsp;உதகை, பிப். 20- நீலகிரி மாவட்டம் உதகை அருகே ரேஷன் அரிசி கடத்த &nbsp;முயன்ற நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து &nbsp;ஒன்றரை டன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய வாக னத்தை பறிமுதல் செய்தனர். &nbsp;உதகை பெர்னல் பேலஸ் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் சிறப்புப் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட னர். அப்போது அவ்வழியாக வந்த கூடலூர் பதிவு எண் கொண்ட (TN 43 AZ 0358) மினி சரக்கு வாகனத்தை மறித்துச் &nbsp;சோதனை செய்தனர். அதில் 38 மூட்டைகளில் கடத்தி வரப் பட்ட ஒன்றரை டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட் டது. &nbsp;இதனையடுத்து அரிசி கடத்தி வந்த, முகமதுவை கைது &nbsp;செய்த போலீசார், அரிசியையும் வாகனத்தையும் பறிமுதல் &nbsp;செய்தனர். விசாரணையில், குந்தா தாலுகா ஒசஹட்டி பகுதியை &nbsp;சேர்ந்த சந்துரு என்பவரின் உதவியுடன் ரேஷன் அரிசியை கடத்தி வந்ததாக முகமது ஒப்புக்கொண்டார். இச்சம்ப வம் குறித்து குடிமைப்பொருள் வழங்கல் துறையினர் வழக் குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சந்துருவை தீவிர மாக தேடி வருகின்றனர்.</p> <p><strong>விபத்து கோவை</strong>,</p> <p>பிப்.20- நிலைதடுமாறி கீழே விழுந்த இளைஞர் மீது பள்ளி வாகனம் ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தருமபுரியைச் சேர்ந்த வர் அக்க்ஷய குமார் (24). இவர் தனது இருசக்கர வாக னத்தில் வெள்ளியன்று &nbsp;கோவை, புலியகுளம் அருகே ரெட்பீல்ட் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, &nbsp;திடீரென மோட்டார் சைக்கிள் &nbsp;சறுக்கி கீழே விழுந்தார். &nbsp;அப்போது அந்த வழி யாக வந்த தனியார் பள்ளி வாகனம், கீழே விழுந்த அக்ஷய் குமார் மீது ஏறி &nbsp;இறங்கியது. இதில் சம்பவ &nbsp;இடத்திலேயே அவர் உயிரி ழந்தார்.</p> <p><strong>வாலிபர் சங்க போராட்ட அறிவிப்பு எதிரொலி கொத்தனாம்பட்டிக்கு பேருந்து இயக்க உறுதி</strong></p> <p>தருமபுரி, பிப். 20- வாலிபர் சங்க போராட்ட அறிவிப்பால் அரூரிலிருந்து கொத்தனாம்பட்டி கிராமத்திற்கு ஒரு வாரத்திற்குள் பேருந்து இயக்கப்படும் என போக்கு வரத்து கிளை மேலாளர் உறுதியளித்ததால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த செல்லம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொத்தனாம்பட்டி கிராமத்திற்கு கீழானூர் வழியாக காலை 8.00 மணி முதல் 8.30 மணிக்குள் அரசு பேருந்து இயக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், போக்குவரத்துக் கழகம் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், அரூரில் ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுத்தனர். இதனையடுத்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அரூர் கிளை மேலாளர் செல்வம் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மா. குரளரசன், வட்டச் செயலாளர் பி. பிரவீன், நிர்வாகி சி. தேசிங்கு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் எம். முத்து, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் சி. ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில், வரும் பிப்ரவரி 25-ஆம் தேதிக்குள் கொத்தனாம்பட்டி கிராமத்திற்கு தடையின்றி பேருந்து இயக்கப்படும் என கிளை மேலாளர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். அதிகாரிகளின் இந்த உறுதியை ஏற்று, திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக வாலிபர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.</p> <p><strong>இனாம் நில பிரச்சனைக்கு தீர்வு காண திருப்பூரில் சிறப்பு</strong></p> <p>ஆர்.டி.ஓ. நியமனம் திருப்பூர், பிப்.20 &ndash; திருப்பூர் மாவட்டத்திற்கு பதிவுகள் சரிபார்ப்புப் பணிக் காக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் என்ற புதிய பணி யிடத்தை உருவாக்கி, அந்த பணியிடத்திற்கு மயில் என்பவர் &nbsp;நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார். திருச்சி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சிறப்பு மாவட்ட வருவாய் &nbsp;அலுவலர் (பதிவுகள் சரிபார்ப்பு) என்ற இரு புதிய பணியிடங் கள் உருவக்கப்பட்டு, அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக திருச்சி மற்றும் திருப்பூர் மற்றும் அதன் &nbsp;சுற்று வட்டார மாவட்டங்களில் உள்ள இனாம் நிலங்கள் &nbsp;தமிழ்நாடு சிறு இனாம்கள் (ஒழிப்பு மற்றும் ரயத்துவாரியாக மாறுதல்) சட்டம் 1963இன்படி தகுதியான நபர்களுக்கு ரயத்து வாரி பட்டாக்கள் வழங்கப்பட்டன. இந்த பட்டா பெற்ற பலருக்கு நிலமதிப்பு பூஜ்ஜியமாக் கப்பட்டு பத்திரப்பதிவு தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்பட பல்வேறு &nbsp;விவசாய அமைப்புகள், பொது மக்கள் இனாம் நிலப் பிரச்ச னைக்குத் தீர்வு காணவும், தடையை நீக்கி பத்திரப் பதிவுக்கு &nbsp;அனுமதி வழங்கவும் வலியுறுத்தினர். இதற்காக இயக்கங்க ளும் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், விவசாயிகளின் நீண்ட நாள் &nbsp;கோரிக்கையை ஏற்று, இனாம் நிலங்களில் ஏற்படுத்தப்பட் டுள்ள பத்திரப்பதிவு தடை தொடர்பான பிரச்சனைகளில் முறையான விசாரணை மேற்கொண்டு தீர்வு காணும் வகை யில், இரண்டு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (பதிவு கள் சரிபார்ப்பு) என்ற புதிய பணியிடங்கள் உருவாக் கப்பட்டுள்ளன. &nbsp;திருப்பூர் மாவட்டத்திற்கு அ.மயில், திருச்சிக்கு ஆர்.ரமேஷ் ஆகியோர் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (பதி வுகள் சரிபார்ப்பு) ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.</p> <p><strong>திருப்பூர் தெற்கு தொகுதியில் ஸ்டாலின், உதயநிதி &nbsp;போட்டியிட எம்எல்ஏ செல்வராஜ் விருப்ப மனு</strong></p> <p>திருப்பூர், பிப்.20 - திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தமிழக &nbsp;முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் &nbsp;போட்டியிட வேண்டும் என அந்த தொகுதி திமுக எம்எல்ஏ &nbsp;க.செல்வராஜ் விருப்ப மனு அளித்திருக்கிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் &nbsp;போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்க அக்கட்சித் &nbsp;தலைமை அறிவித்துள்ளது. அதன்படி வெள்ளியன்று திருப் பூர் தெற்குத் தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜ் அண்ணா அறி வாலயத்தில் இந்த மனுக்களைத் தாக்கல் செய்தார். அத்துடன் &nbsp;திருப்பூர் தெற்குத் தொகுதியில் மீண்டும் போட்டியிட தனது &nbsp;பெயரிலும் செல்வராஜ் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கி றார்.</p> <p><strong>எம்எஸ்எம்இ ஏற்றுமதி தொழில்களுக்கு ஆதரவு: ஏஇபிசி வரவேற்பு</strong></p> <p>திருப்பூர், பிப்.20 - ஏற்றுமதி ஊக்குவிப்பு இயக்கத்தின் கீழ் சிறு, குறு, நடுத்தர &nbsp;(எம்எஸ்எம்இ) ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஏழு கூடுதல் தலை யீடுகள் உருவாக்கப்பட்டிருப்பதற்கு ஆயத்த ஆடை &nbsp;ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (ஏஇபிசி) வரவேற்புத் தெரி வித்துள்ளது. ஒன்றிய வர்த்தகத் தொழில் துறை அமைச்சர் பியூஸ் &nbsp;கோயல் ஏற்றுமதி ஊக்குவிப்புதிட்டத்தின் கீழ் சிறு, குறு, நடுத் தர ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வெள்ளியன்று இதை அறிவித் துள்ளார். இந்த புதிய அறிவிப்புகள் இந்திய ஏற்றுமதி தொழில் &nbsp;சூழலை வலுப்படுத்தி, சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவ னங்கள் உலகச் சந்தையில் திறன்மிகு போட்டிபோட உதவி &nbsp;செய்யும். இது குறிப்பிடத்தக்க சரியானநேரத்தில் மேற்கொள் ளப்பட்டிருக்கும் நடவடிக்கை என்று ஏஇபிசி தலைவர் ஏ.சக்தி வேல் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக மாற்று வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஆதரவு, &nbsp;இ காமர்ஸ் ஏற்றுமதியாளர்களுக்கு கடன் உதவி, புதிய ஏற்று மதி வாய்ப்புகளுக்கு ஆதரவு, வர்த்தக ஒழுங்கமைப்பு, சரக்கு &nbsp;அனுப்புவது, வெளிநாடுகளில் இருப்பு வைப்பதற்கான கி டங்கு, வசதி உள்ளிட்ட ஏழு அம்ச தலையீடுகள் மேற்கொள்ள &nbsp;இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.</p> <p><strong>உலக தாய்மொழி தினம்; உலக தாய்மொழி தின உறுதிமொழி</strong></p> <p>திருப்பூர், பிப்.20- உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் &nbsp;அலுவலக் கூட்டரங்கில் வெள்ளியன்று அனைத்துத்துறை &nbsp;அலுவலர்களும் உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். &nbsp;மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே தலைமையில் &nbsp;நடைபெற்ற இந்நிகழ்வில், எங்கும் தமிழ் - எதிலும் தமிழ் எப் போதும் தமிழ் என்ற நடைமுறையை கொண்டுவரப் பாடுபடு வோம். தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழி லேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணை யற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் &nbsp;என்று உலக தாய்மொழி நாளான உளமாற உறுதி கூறுகி றேன் என அனைத்துத்துறை அலுவலர்களும் உலக தாய் மொழி தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.</p> <p><strong>மின்வாரிய உதவி பொறியாளர் சஸ்பெண்ட்</strong></p> <p>திருப்பூர், பிப்.20 - விதிமீறி கட்டப்பட்ட கட்டிடத்திற்கு இணைப்பு வழங்கிய தாக மின்வாரிய உதவிப் பொறியாளர் பணியிடை நீக்கம் செய் யப்பட்டார். திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்றச் சங்கத் தலைவர் அ. சரவணன் அளித்த புகார் மனு மீது மேற்பார்வைப் பொறியா ளர் சுமதி பதில் அளித்திருக்கிறார். இதில் திருப்பூர் வடக்கு பாண்டியன் நகரிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்குட் பட்ட பகுதியில் விதிக்குப் புறம்பாக அனுமதியில்லாத அடுக் குமாடி கட்டிடத்திற்கு 100 யூனிட் இலவச வீட்டு இணைப்பு கள் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நுகர்வோர் நல முன்னேற்றச் சங்கத்தின் மூலம் புகார் அளிக்கப்பட்டது. இந்த &nbsp;நிலையில் இந்த புகார் தொட&zwnj;ர்பாக திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுமதி மேற்கொண்ட நடவ டிக்கை குறித்து தெரிவித்திருக்கிறார். இந்தப் புகாரில் தொடர்புடைய அலுவலரான உதவி மின் &nbsp;பொறியாளர் சி.நவீன்குமார், பாண்டியன் நகர்/ ஊத்துக்குளி &nbsp;கோட்டம் என்பவர் மீது கடந்த ஜனவரி 8 பிற்பகல் அன்று தற்கா லிக பணி நீக்கம் செய்யப்பட்டு, வாரிய ஒழுங்கு மற்றும் மேல் &nbsp;முறையீடு விதியின்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வளாகத்திற்கு அளிக்கப்பட்ட மின் இணைப் புகள் மின் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற விபரத்தை யும் மேற்பார்வைப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.