மின்ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
8 Jan 2026, 2:44 pm
<p><strong>மின்ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு மின்வாரியமே நேரடியாக தினக்கூலியாக அவர்களுக்கு ரூ.764 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வேலூர் தலைமை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு திட்டக்கிளை தலைவர் வி.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.சிஐடியு மாவட்ட தலைவர் டி.முரளி, மாநில துணைத்தலைவர் எம்.கோவிந்தராஜ், செயலாளர் சின்னதுரை, பொருளாளர் முரளிகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
