குழந்தைகள் பாடசாலை அருகே ஆபத்தை ஏற்படுத்தும் மின் கம்பி
11 Mar 2026, 4:32 pm
<p><strong>குழந்தைகள் பாடசாலை அருகே ஆபத்தை ஏற்படுத்தும் மின் கம்பி</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 11- திருப்பூர் நகரில் விபத்தை ஏற்படுத்தும் வகை யில் குழந்தைகள் பாட சாலை அருகில் அமைந் துள்ள மின் கம்பியை மாற்றித் தரும்படி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரி யுள்ளனர். இந்திய ஜனநாயக வாலி பர் சங்கக் குமரன் காலனி கிளை சார்பில் பாண்டியன் நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் புதனன்று மனு அளித்தனர். திருப்பூர் மாந கராட்சி 1 ஆவது வார்டுக்குட்பட குமரன் காலனியில் பள்ளிவாசல் உள்ளது. இதன் மேல்தளத்தில் இஸ்லாமிய பாடசாலையில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். பள்ளிவாசலுக்கு முன்பு மின் கம்பிகள் பாடசாலை ஜன்னலுக்கு மிக அருகில் செல்கி றது. மழை காலங்களில் மின் கம்பி காற்றில் அசைந்து இதன் சுவரில் உரசும் சூழல் உள் ளது. எனவே விபரீதம் ஏற்படும் முன் மின் பாதையை மாற்றித் தர வேண்டும். இது குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் தெரிவித்ததால் இதன் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் பரிந்துரை செய்துள் ளனர். இதையடுத்து சட்டமன்ற தொகுதி நிதி யில் இருந்து மின் கம்பியை மாற்றி தருவ தாகத் தெரிவித்திருந்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அசம் பாவிதம் நிகழும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். இம்மனுவைப் பெற்று கொண்ட மின் பொறியாளர், அந்த இடத்தை நேரில் பார்வை யிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளித்தார். வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் சந்தோஷ், கிளைச் செயலாளர் முகமது தெளபிக், கிளைத் தலைவர் முகமது ரபிக், துணைச் செயலாளர் அஜித் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
