தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பைக்காராவில் மின் மோட்டார் மூலம் படகுகள் இயக்கம்

5 Apr 2026, 5:18 pm
பைக்காராவில் மின் மோட்டார் மூலம் படகுகள் இயக்கம்
<p><strong>பைக்காராவில் மின் மோட்டார் மூலம் படகுகள் இயக்கம்</strong></p> <p>உதகை, ஏப்.5- பைக்காரா படகு இல்லத்திலி ருந்து பெட்ரோல் மோட்டார் படகு கள் இயக்குவதற்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில், தற்போது &nbsp;மின் மோட்டார் மூலம் படகுகள் &nbsp;இயக்கப்படுவதற்கு சுற்றுலாப் பய ணிகள் வரவேற்பு தெரிவித்துள்ள னர். சர்வதேச சுற்றுலாத் தலமான &nbsp;நீலகிரிக்கு ஆண்டுக்கு 30 லட்சத் திற்கும் அதிகமான சுற்றுலாப் பய ணிகள் வந்து செல்கின்றனர். அந்த &nbsp;வகையில், நீலகிரி மாவட்டத்தி லுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்க ளில் ஒன்றாக உள்ள பைக்காரா படகு இல்லம், அடர்ந்த வனப்பகுதி யின் நடுவில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் படகு சவாரி செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை &nbsp;தருகின்றனர். இங்கு பெட்ரோல் &nbsp;மோட்டார் மூலம் படகுகள் இயக்கப் படுவதால் காற்று, நீர் மாசுபடுவ தாக கோவையை சேர்ந்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசா ரித்த நீதிபதிகள் பைக்காரா படகு &nbsp;இல்லத்தில் பெட்ரோல் மோட்டார் படகுகளை இயக்க தடை விதித்த னர். &nbsp;இதையடுத்து கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் பைக்காராவில் படகு சவாரிகள் நிறுத்தப்பட்டு படகு இல்லம் மூடப்பட்டது. இத னால் ஏராளமான சுற்றுலாப் பயணி கள் ஏமாற்றமடைந்தனர். இதைய டுத்து சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், படகுகளில் பேட்டரிகள் &nbsp;மூலம் இயங்கக்கூடிய மின்மோட் டார்கள் பொருத்தி இயக்க சுற்றுலா &nbsp;வளர்ச்சிக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில், வெள்ளியன்று ரூ.21 லட்சம் மதிப்பி லான மின்மோட்டார் பொருத்தப் பட்ட 3 படகுகளின் சோதனை ஓட்டம் &nbsp;நடைபெற்றது. 8 எச்.பி., 12 எச்.பி. திறன் கொண்ட மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு சத்தம் அதிக அள வில் இல்லாமல் படகுகள் இயக்கப் பட்டன. ஒரு முறை சார்ஜ் செய்தால் &nbsp;2 மணி நேரம் ஓடும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சனியன்று படகு &nbsp;இல்லம் திறக்கப்பட்டு சுற்றுலாப் &nbsp;பயணிகள் சவாரி செய்ய அனு மதிக்கப்பட்டனர். மின்மோட்டார் படகுகளில் பயணம் செய்த சுற்று லாப் பயணிகள் அதிக சத்தமின்றி, &nbsp;புகை மற்றும் மாசில்லாமல் படகு &nbsp;சவாரி செய்து மகிழ்ச்சியடைந்த னர். அதிக வேகம் இல்லாமல் மெது வாக செல்லும் படகு மூலம் இயற்கை காட்சிகளை கண்டு ரசிப் பது புதிய அனுபவமாக இருந்த தால் வரவேற்பு தெரிவித்தனர். 30 &nbsp;படகுகள் இயங்கிய இடத்தில் தற் போது 3 மின்மோட்டார் படகுகளே &nbsp;இயக்கப்படுவதால், வரும் நாட்க ளில் கூடுதலாக மின்மோட்டார் படகுகள் இயக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.