தண்டையார் பேட்டையில் மின்சார பேருந்து பணிமனை திறப்பு
2 Mar 2026, 3:30 pm
<p><strong>தண்டையார் பேட்டையில் மின்சார பேருந்து பணிமனை திறப்பு</strong></p>
<p>சென்னை தண்டையார்பேட்டையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 33.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ள தண்டையார்பேட்டை- 1 மின்சார பேருந்து பணிமனையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திங்கட்கிழமை திறந்து வைத்து, 170.00 கோடி ரூபாய் மதிப்பிலான 100 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், ஜே.ஜே. எபினேசர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.</p>
