முந்தய பக்கம்

தேர்தல் நிதி வழங்கிய போக்குவரத்து ஓய்வு பெற்றோர்-கூட்டுறவு ஊழியர்கள்

11 Apr 2026, 5:30 am
தேர்தல் நிதி வழங்கிய போக்குவரத்து ஓய்வு பெற்றோர்-கூட்டுறவு ஊழியர்கள்
<p><strong>தேர்தல் நிதி வழங்கிய போக்குவரத்து ஓய்வு பெற்றோர்-கூட்டுறவு ஊழியர்கள்</strong></p><p>நாகர்கோவில், ஏப்.10- குமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக ஆர்.செல்லசுவாமி போட்டியிடுகிறார்.</p><p>அவரது வெற்றிக்கு தேர்தல் பணி செய்வது என்ற சங்கத்தின் முடிவின் அடிப்படையில் அரசு விரைவு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ரூ.50 ஆயிரம் நிதியை சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜேந்திரனிடம் வழங்கினர்.</p><p>கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் முதற்கட்ட தேர்தல் நிதியாக ரூ.10 ஆயிரத்தை வெள்ளியன்று சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் ஆர்.கருணாமலையனிடம் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram