தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

22 Mar 2026, 4:19 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்
<p><strong>முதலமைச்சருடன் ப.சிதம்பரம் சந்திப்பு </strong></p> <p>சென்னை: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு இழு பறியை முடிவுக்கு கொண்டு வர, மூத்த காங்கிரஸ் தலை வர் ப.சிதம்பரம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள &nbsp;இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, புதுச்சே ரியில் வேட்புமனுத் தாக்கல் திங்கட்கிழமை நிறைவடைவதை யொட்டி, இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேசிய ஜன நாயக கூட்டணி ஏற்கனவே தொகுதிப் பங்கீட்டை இறுதி &nbsp;செய்திருக்கும் நிலையில், காங்கிரஸ்-திமுக கூட்டணியில் &nbsp;முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p> <p><strong>புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்து: முதல்வர் பெருமிதம்</strong></p> <p>சென்னை: &ldquo;விடியல் பயணம் திட்டம் புதிய எதிர்கா லத்தை எழுதிய முதல் கையெழுத்து&rdquo; என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். &nbsp;இதுகுறித்து அவர் தனது &lsquo;எக்ஸ்&rsquo; தளத்தில், &ldquo;தமிழ் நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் விடியல் பயணத் திட்டம் மார்ச் 1 வரை மொத்தம் 897.82 கோடி பயணங்களை எட்டியுள் ளது. 7,712 விடியல் பேருந்துகளில் 2021-22 ஆண்டில் &nbsp;95.86 கோடி பயணங்களாக தொடங்கி, 2025-26 &nbsp;ஆண்டில் 235.14 கோடி பயணங்களாக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் செயல் படுத்தப்பட்ட இத்திட்டம் இப்போது பிற மாநிலங்களாலும் பின்பற்றப்படுகிறது. மகளிர் மட்டுமின்றி திருநர்கள் மற்றும் &nbsp;மாற்றுத் திறனாளிகளும் இத்திட்டத்தில் பயன்பெறுங்கள். திமுக ஆட்சியில் இத்திட்டம் மேலும் மேம்படுத்தப்படும்&rdquo; என தெரிவித்துள்ளார்.</p> <p><strong>எஸ்.சி., எஸ்.டி. ஆணையத் தலைவர் &nbsp;தமிழ்வாணன் காலமானார் சென்னை: தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தின்</strong></p> <p>தலைவரும், சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதி பதியுமான ச.தமிழ்வாணன் உடல்நலக்குறைவால் காலமா னார். 2005 முதல் 2016 ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அவர், நீதித்து றையில் மட்டுமல்லாது சமூகநீதியிலும் ஆழ்ந்த அக்கறை &nbsp;கொண்டவராகப் பாராட்டப்பட்டார். பின்னர் தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்று, ஆணையத்தின் பணிகளை உறுதியாக முன்னெடுத்தவர் என்றும் சமூகநீதி சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளில் தீவிர மாக ஈடுபட்டவர் என்றும் கூறப்படுகிறது<strong>. </strong></p> <p><strong>அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு</strong></p> <p>புதுச்சேரி: ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள புதுச்சேரி 15 ஆவது சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் &nbsp;போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணியில் 2 தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், உப்பளம் தொகுதியில் அன்பழகனும், உருளையன்பேட்டை தொகுதி யில் காந்தியும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுகவுக்கு இம்முறை 2 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. &nbsp;</p> <p><strong>விக்கிரமராஜா கண்டனம்</strong></p> <p>சென்னை: தேர்தல் அதிகாரிகள் சோதனை என்ற &nbsp;பெயரில் வியாபாரிகளை துன்புறுத்துவதாக விக்கிரமராஜா &nbsp;கண்டனம் தெரிவித்துள்ளார். இதில் மார்ச் 27 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் &nbsp;என்று விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். வியாபாரி களிடம் பணம் பறிமுதல் செய்வதை கைவிடாவிட்டால், மார்ச் &nbsp;31 ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெறும். பணம் &nbsp;கொண்டு செல்வதில் வியாபாரிகளுக்கு தளர்வு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.</p> <p><strong>தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்?</strong></p> <p>சென்னை: தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மார்ச் 23 அன்று நடைபெற உள்ளது. இதில் தேர்தல் &nbsp;தொடர்பாகவும், கூட்டணித் தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் &nbsp;அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசிக்க உள்ளார். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் &nbsp;தேமுதிக இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் தேமுதிகவுக் கான தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து திமுக-தேமுதிக பேச்சுவார்த்தைக்குப் பிறகு அறிவிக்கப்படவுள்ளது. <strong>&nbsp;</strong></p> <p><strong>சுகாதாரத் துறை அறிவுறுத்தல்</strong></p> <p>சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவும் நிலையில் வழிமுறை களை பின்பற்ற சுகாதாரத் துறை ஆணையிட்டுள்ளது. கிண்டி சிறுவர் பூங்காவில் உயிரிழந்த பறவைகளை ஆய்வு &nbsp;செய்ததில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது. &nbsp;முழுமையாக சமைக்கப்படாத, சரிவர சமைக்கப்படாத முட்டை, இறைச்சி வகைகளை உண்பதை தவிர்க்க வேண்டும். &nbsp;இறைச்சிக் கழிவுகளை பொது வெளியில் கொட்டக் கூடாது என &nbsp;அறிவுறுத்தியுள்ளது.</p> <p><strong>ரூ.75 கோடி மதிப்பிலான பணம்-பொருட்கள் பறிமுதல் &nbsp;தேர்தல் ஆணையம் தகவல்</strong></p> <p>சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் &nbsp;அமலுக்கு வந்ததிலிருந்து இதுவரை ரூ.75 கோடி மதிப்பி லான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, மாநிலம் &nbsp;முழுவதும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியி லும் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் &nbsp;அமைக்கப்பட்டு வாகனச் சோதனைகள் நடத்தப்படுகின்றன. வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்க ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமாக &nbsp;உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. அதன்படி தற்போது வரை &nbsp;ரூ.23 கோடியே 74 லட்சம் ரொக்கப் பணம், ரூ.23 கோடியே &nbsp;19 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் நகைகள், ரூ.61 &nbsp;லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேலும் ரூ.5 கோடியே 63 லட்சம் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், ரூ.21 கோடியே 96 லட்சம் மதிப்பிலான இலவச பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் &nbsp;செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளில் தலா 9 பறக்கும் படைகள் மற்றும் 9 நிலை கண்காணிப்பு குழுக்கள் &nbsp;அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி 2,160 பறக்கும் படைகள் &nbsp;மற்றும் 2,160 கண்காணிப்பு குழுக்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன என தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.