முந்தய பக்கம்

அனுமதிமின்றிக் தேர்தல் பிரச்சாரம்:

10 Apr 2026, 5:30 am
அனுமதிமின்றிக் தேர்தல் பிரச்சாரம்:
<p><strong>அனுமதிமின்றிக் தேர்தல் பிரச்சாரம்:</strong></p><p>மத்தூர் தவெக நிர்வாகிகள் 20 பேர் மீது வழக்குப் பதிவு! கிருஷ்ணகிரி, ஏப்.9- கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம் மத்தூர் பகுதியில் உரிய அனுமதியின்றித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகத் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.</p><p>கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதியன்று மத்தூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது, தேர்தல் ஆணையத்திடம் முன்கூட்டியே உரிய அனுமதி பெறாமல் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>இது குறித்துத் தகவல் அறிந்த தேர்தல் பறக்கும் படையினர் (Flying Squad), விதிமுறையை மீறிச் செயல்பட்டதாக மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram