100 டிராக்டர்கள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு பேரணி
3 Apr 2026, 6:05 pm
<p><strong>100 டிராக்டர்கள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு பேரணி</strong></p>
<p>அறந்தாங்கி, ஏப். 3- <br />
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார்கோவில் அருகே, பெருமருதூர் கடைவீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பேரணி தேர்தல் விழிப்புணர்வு பதாகைகளுடந் நடைபெற்றது. <br />
அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கூறி பல்வேறு விழிப்புணர்வு நடத்தி வரும் நிலையில் இந்தப் பகுதியில் டிராக்டர்கள் வைத்து விழிப்புணர்வு நடத்தினர். மணமேல்குடி தாலுகாவில் 100 % வாக்களிக்க வலியுறுத்தி 100 டிராக்டர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி பெருமருதூர் கடைவீதியில் தொடங்கி பல்வேறு கிராமங்கள் வழியாக ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. <br />
டிராக்டர் பேரணி நிகழ்ச்சியை கோட்டாட்சியர் அபிநயா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், வட்டாட்சியர்கள் சிவகுமார், மார்ட்டின் உள்ளிட்ட அலுவலர்களும், பணியாளர்களும் கலந்து கொண்டனர்.</p>
