பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கல்வி கடன் வழங்கும் முகாம்
27 Nov 2025, 3:11 pm
<p>ஓசூர் மாவட்டத்தில் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஓசூர் சென்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா முகாமை துவக்கி வைத்தனர். மாவட்டத்தில் பல கல்லூரிகளைச் சேர்ந்த 37 மாணவர்களுக்கு ரூ.3 கோடியே 67 லட்சம் மதிப்பிலான கல்விக் கடன்களை வழங்கினர். இதில் ஓசூர் துணை மேயர் ஆனந்தய்யா, இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் வெங்கடேசன், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜா முத்தையா,ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
