முந்தய பக்கம்

கண்ணியக்குறைவான பேச்சு எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்!

11 Apr 2026, 5:30 am
கண்ணியக்குறைவான பேச்சு எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்!
<p><strong>கண்ணியக்குறைவான பேச்சு எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்!</strong></p><p>சென்னை, ஏப். 10 - திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக்குறைவாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பெண் நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><p>முன்னாள் முதலமைச்சர் என்று கூட இல்லாமல் மூன்றாம் தர நிர்வாகி போல் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அதிமுக கூட்டங்களில் பெண்கள் குறித்து தரம் தாழ்ந்து பேசுவது வழக்கமாகிவிட்டது. இதற்காக அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><p>எடப்பாடி பழனிசாமி மட்டுமல்லாது சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் போன்றோரும் பெண்களை இழிவுபடுத்திப் பேசுகின்றனர். பொதுவெளிக்கு வரும் பெண்களைத் தரம் தாழ்ந்து பேசுபவர்களுக்குத் தமிழ்நாடு பெண்கள் தேர்தல் மூலம் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என திமுக மகளிர் அணி தலைவர்கள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram