முந்தய பக்கம்

எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்!

11 Apr 2026, 5:30 am
எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்!
<p><strong>எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்!</strong></p><p>கண்ணியக்குறைவான பேச்சு. திமுக மகளிரணி தலைவர்கள் கண்டனம்.</p><p>சென்னை, ஏப். 10 - திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பெண் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><p>சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை தர்மபுரி தங்கப் பாண்டியன் எம்.பி., கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோர் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: “திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவான வார்த்தைகளில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.</p><p>முன்னாள் முதலமைச்சர் என்று கூட இல்லாமல் மூன்றாம் தர நிர்வாகி போல் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். பாஜ-வுடன் கூட்டணியில் இருப்பதால் பெண்கள் குறித்து தரம் தாழ்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்!”</p><p>எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசனும் தரம் தாழ்ந்து பேசுகின்றனர். பெண்களை இழிவுபடுத்தி பேசுவதை அதிமுகவினர் செயல்திட்டமாகவே வைத்துள்ளனர்.</p><p>பொதுவெளிக்கு வரும் பெண்களை அதிமுகவினர் தரம் தாழ்ந்து பேசுகின்றனர். அவர்களுக்கு தமிழ்நாடு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு திமுக மகளிரணி தலைவர்கள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram