முந்தய பக்கம்

மிசோரமில் 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

5 Jun 2026, 12:46 am
மிசோரமில் 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
<p><strong>மிசோரமில் 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை</strong> </p><p>இந்தியாவிற்குள் மியான்மர் நாட்டுப் பாக்குகள் சட்டவிரோ தமாகக் கடத்தப்பட்டது தொ டர்பாக, மிசோரம் - மியான்மர் எல்லை யில் உள்ள சம்பாய் எல்லைப் பகுதியில் 9 இடங்களில் அமலாக்கத்துறை வியா ழக்கிழமை சோதனைகளை மேற் கொண்டது. </p><p>இதுதொடர்பாக அமலாக்கத்துறை கூறுகையில்,“சோதனையின் கீழ் இருக்கும் நபர்கள் மியான்மரைச் சேர்ந்த பாக்குச் சரக்குகளை ‘தியாவ்’ நதி வழி யாகச் சட்டவிரோதமாகக் கொண்டு வந்துள்ளனர். </p><p>பின்னர் அவற்றை உள்ளூர்க் கிடங்குகளில் சேமித்து வைத்து, போலியான இ-வே பில்கள், ஆவணங்க ளைப் பயன்படுத்தி, அவை உள்ளூரி லேயே சட்டப்பூர்வமாக வாங்கப்பட்ட வை போலக் காட்டியுள்ளனர். </p><p>இந்தச் சட்டவிரோதக் கடத்தல் மூலம் பல நூறு கோடி ரூபாய் பணம் சம்பாதிக்கப்பட்டு, அது முறையாகப் பல இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. </p><p>மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களது உள்ளூர் பழங்குடியின அந்தஸ்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சுங்கத்துறையி னரால் பறிமுதல் செய்யப்படும் கடத் தல் பொருட்களை விடுவிப்பதற்காக, சம்பந்தமில்லாத பழைய இறக்குமதி ஆவணங்களைக் காட்டி ‘உரிமையா ளர்கள்’ போலச் செயல்பட்டுள்ளனர்.</p><p>இதனால் தான் மிசோரம் மாநிலத்தின் 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது” என அமலாக்கத்துறை தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram