தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடலூர் மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

18 Feb 2026, 3:04 pm
கடலூர் மாவட்டத்தில் போதைப் பொருள்  தடுப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
<p><strong>கடலூர் மாவட்டத்தில் போதைப் பொருள் &nbsp;தடுப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி</strong></p> <p>கடலூர், பிப்.18- போதைப் பொருட்களை ஒழித்திடவும், போதைப் பொருட்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு என்ற நிலையினை உரு வாக்கிடவும் பல்வேறு சிறப்பு முன்னெடுப்பு களை தமிழக முதலமைச்சர் &nbsp;எடுத்து வருகிறார்கள். காவல்துறை, செய்தி மக்கள் தொடர்புத் துறை, கலால், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, போக்கு வரத்துத்துறை உள்ளிட்ட அரசுத் துறை களின் வாயிலாக போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. &nbsp; பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான உறுதிமொழி, விழிப்புணர்வு பேரணிகள், பிரச்சாரங்கள் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்கள் மது, புகையிலை, கூல்லிப், ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்கும், அவர்கள் எதிர்காலத்தினை &nbsp;ஒளிமயமானதாக மாற்றவும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுஇடங்களில் போதைப் பொருள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சிய ரால் பிப்.16 அன்று விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. &nbsp;அதன் தொடர்ச்சியாக &nbsp;விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலைநிகழ்ச்சிகள் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு &nbsp;வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடலூர் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேடை நாடகக் கிராமிய கலைஞர்களின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.