தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாகன புதுப்பிப்பு கட்டணம் பல மடங்கு உயர்வு! கண்டித்து ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

10 Dec 2025, 4:08 pm
வாகன புதுப்பிப்பு கட்டணம் பல மடங்கு உயர்வு! கண்டித்து ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>வாகன புதுப்பிப்பு கட்டணம் பல மடங்கு உயர்வு! கண்டித்து ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>புதுச்சேரி, டிச.10- வாகனங்கள் புதுப்பிப்பதற்கான கட்டணங்களை பன் மடங்கு உயர்த்தி உள்ளதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஒன்றிய பாஜக அரசு, மோட்டார் வாகனத்திற்கான எப்.சி கட்டணத்தை 200 மடங்கும்,இரண்டு சக்கரம்,மூன்று சக்கர வாகனங்கள், 4 சக்கர வாக னங்கள்,பேருந்து, லாரி,வேன் போன்ற கனரக &nbsp;வாகனங்களின் &nbsp; கட்டணத்தை பன்மடங்கு உயர்த்திருப்பதை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது. &nbsp;புதுச்சேரி மதகடிப்பட்டு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் கீழே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் புதுச்சேரி தலைவர் ராஜா தலைமை தாங்கினார். சிஐடியு புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் சீனுவாசன், &nbsp;தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மதிவாணன், தனியார் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அன்புமணி,சிஐடியு மாநில நிர்வாகிகள் லிங்கேசன்வேலு, மணிபாலன் மற்றும் நிர்வாகிகள் &nbsp;சஞ்சீவி, சதீஷ்,ஜீவா தண்டபாணி, உள்ளிட்ட திரளான போக்குவரத்து ஊழியர்கள் இப் போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக &nbsp;வாகனங்களின் பழுது பார்க்கும் கட்டணங்கள &nbsp;உயர்த்தி உள்ளதை ஒன்றிய பாஜக அரசு திரும்பப் பெறக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.