பாரபட்சத்தை கண்டித்து பொன்னேரியில் டிஆர்இயூ ஆர்ப்பாட்டம்
21 Jun 2026, 1:38 am
<p><strong>பாரபட்சத்தை கண்டித்து பொன்னேரியில் டிஆர்இயூ ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருவள்ளூர், ஜூன் 20-</p><p>தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் பாரபட்ச போக்கைக் கண்டித்தும், ஊழியர்களின் அடிப்படை வசதிகளை வலியுறுத்தியும் பொன்னேரி ரயில் நிலையத்தில் தக்ஷின் ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p>சங்கத் தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில், எஸ்ஆர்எம்யூ சங்கத்திற்கு இணையாக வாக்குகள் பெற்றும் டிஆர்இயூ சங்கத்திற்கு 70 கிளைகள் மட்டுமே வழங்கி நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. எஸ்ஆர்எம்யூ-க்கு இணையாக 170 கிளைகளை அனுமதிக்க வேண்டும், ரயில்வே கடவுப்பாதை ஊழியர்களுக்குக் குடிநீர், கழிப்பறை வசதிகளை உருவாக்க வேண்டும் மற்றும் பணியிட மாறுதல் குளறுபடிகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
