சிபிஎஸ்இ குறைபாட்டை அம்பலப்படுத்திய தில்லி மாணவரை ‘பாகிஸ்தானி’ என அழைத்த தூர்தர்ஷன் செய்தியாளர்
29 May 2026, 8:15 pm
<p><strong>சிபிஎஸ்இ குறைபாட்டை அம்பலப்படுத்திய தில்லி மாணவரை ‘பாகிஸ்தானி’ என அழைத்த தூர்தர்ஷன் செய்தியாளர்</strong></p><p>புதுதில்லி ஆன்லைன் மூலம் விடைத்தாள் திருத்தியதால் தேர்ச்சி விகிதம் குறைந்தது ; மறுமதிப்பீட்டு குளறுபடி (ஒரு பாடத்திற்கு ரூ.60,000க்கு மேல்) என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இடையே மாணவர்களுக்கு விடைத்தாள்கள் தவறாக மாற்றப்பட்ட நிகழ்வும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் நிகழ்ந்துள்ளது.</p><p> இந்தக் குறைபாட்டிற்கு பொறுப்பேற்பதாகக் கூறி, ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிரச்சனையை மூடி மறைக்க முயன்று வருகிறார்.</p><p> இந்நிலையில், சிபிஎஸ்இ குறைபாட்டை அம்பலப்படுத்திய தில்லி மாணவரை ‘பாகிஸ்தானி’ என அழைத்து தூர்தர்ஷன் (ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி நிறுவனம்) செய்தியாளர் ஒருவர் வெறுப்புப் பேச்சை கக்கியுள்ளார். </p><p>சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய வேதாந்த் என்ற மாணவர் தனது டுவிட்டர் எக்ஸ் தளத்தில், “சிபிஎஸ்இ எனக்கு அளித்த இயற்பியல் விடைத்தாளின் நகல் வேறொரு மாணவருக்குரியது. </p><p>இதைக்கண்டு தான் நிலைகுலைந்து போனேன்” எனக் கூறி, விடைத்தாள்களை பகிர்ந்துள்ளார்.</p><p> வேதாந்த்தின் பதிவை ஷேர் செய்து, நாடு முழுவதும் மாணவர்கள், பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினரும் சிபிஎஸ்இ மற்றும் மோடி அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பினர். </p><p>இதனால் பதற்றமடைந்த சிபிஎஸ்இ இயற்பியல் தாளில் ஏற்பட்ட குளறுபடியை ஒப்புக்கொண்டதுடன், வேதியியல் விடைத்தாள் தொடர்பான தனிப்பட்ட புகார் (மற்றொரு சம்பவம்) ஒன்றையும் ஏற்றுக்கொண்டது. </p><p>வேதாந்த்தின் பதிவைப் பார்த்த தூர்தர்ஷன் செய்தி நிறுவனத்தின் மூத்த தொகுப்பா ளரும், ‘தோ துக்’ என்ற நிகழ்ச்சியின் முகமுமான அசோக் ஸ்ரீவஸ்தவ், “பாகிஸ்தானி யர்களும் சிபிஎஸ்இ தேர்வுஎழுதினார்களா?!!” என்று வெறுப்புப் பேச்சுடன் அடாவடியாகப் பதிவிட்டார். </p><p>எதிர்ப்புகள் கிளம்பவே வேதாந்த் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தனது தவறுக்காக அசோக் ஸ்ரீவஸ்தவ் மன்னிப்புக் கோரினார்.</p>
