ஆபத்தான தொழிலில் ஈடுபடுத்தாதீர்: உழைக்கும் பெண்கள் ஆர்ப்பாட்டம்
29 Nov 2025, 4:58 pm
<p><strong>ஆபத்தான தொழிலில் ஈடுபடுத்தாதீர்: உழைக்கும் பெண்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>வேலூர், நவ.29 - அபாயகரமான தொழில்களில் பெண் தொழிலாளர்களை அனுமதிக்கும் விதமாக தமிழக அரசு வெளியிட்ட அரசு ஆணையை ரத்து செய்யக் கோரி அனைத்து தொழிற்சங்கங்களின் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தமிழகம் தழுவிய இயக்கத்தின் ஒரு பகுதியாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏ.குப்பு (சிஐடியு), காவேரி(ஏஐடியுசி), காஞ்சனா(ஐஎன்டியுசி), கலைவாணி (எச்எம்எஸ்) எம்.சரோஜா(ஏஐசிசிடியு) தலைமை தாங்கினர். எஸ்.பரசுராமன் (சிஐடியு), எல்.மணி (ஏஐடியுசி), முகமது அலிஜின்னா (ஐஎன்டி யுசி), கா.வெ.திருப்பதி (எச்எம்எஸ்), இ.புவனேஷ்வரி (ஏஐசிசிடியு) கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.</p>
