தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த மாவட்ட ஆட்சியர்
4 Dec 2025, 3:52 pm
<p>தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த மாவட்ட ஆட்சியர்</p>
<p>திருவண்ணாமலை, டிச.4- திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை (டிச. 3) நடைபெற்றது. இதற்காக தூய்மைப் பணிகளுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளைச் சார்ந்த 1,200 பணியாளர்களும், ஊராட்சிகளைச் சார்ந்த 800 பணியாளர்களும் என மொத்தம் 2,000 தூய்மைப் பணியாளர்கள் சுழற்சி முறையில் கிரிவலப் பாதை மற்றும் நகரம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.</p>
