திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்
20 Jul 2026, 10:13 pm
<p>திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வை குறைபாடுடைய 4 மாணவியர்களுக்கு எழுத்துகளை பெரியதாக காட்டும் கருவிகளையும், ஒரு மாற்றுத் திறன் பயனாளிக்கு ஊன்றுகோலையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். </p>
