கழிவு கலந்த குடிநீர் விநியோகம்
28 Jan 2026, 2:33 pm
<p><strong>கழிவு கலந்த குடிநீர் விநியோகம்</strong></p>
<p>சேலம், ஜன.28- சேலம், காடையாம்பட்டி ஊராட்சி டேவிஸ் பேட்டை சின்ன வடுகம்பட்டி பகுதி பொதுமக்கள் சார்பில் காவேரி என்பவர் குடி நீர் பைப்பில் வரும் கழிவுநீருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதனன்று புகார் மனுவை அளித்தார். இதுகுறித்து அம்மனுவில், இப்பகுதி யில் தொடர்ந்து பொதுமக்கள் குடிக்கும் குடி நீரில் கழிவு கலந்து வருவதால் சுகாதார சீர் கேடும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து காடையாம்பட்டி ஊராட்சி செயலாளர் அனிதாவிடம், பலமுறை மனு அளித்தும், இது வரை எந்த நட வடிக்கை எடுக் காமல், பொது மக்களிடம் அலட்சிய போக் குடன் பதில் அளிக்கிறார். எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் தலையீடு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.</p>
