உடுமலையில் கல்லாபுரத்தில் வீர ராசேந்திரன் காலத்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு
18 Mar 2026, 3:34 pm
<p><strong>உடுமலையில் கல்லாபுரத்தில் வீர ராசேந்திரன் காலத்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு</strong></p>
<p>உடுமலை, மார்ச் 18- கல்லாபுரம் அடுத்த கோபாலபுரம் காட்டுப்பகுதியில் 12 ஆம் நூற்றாண்டில் வடகொங்கு தென்கொங்கு என இரண் டையும் ஆட்சி செய்த வீரராசேந்திரன் காலத்தைய கல்வெட்டை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஆவ ணப்படுத்தினர். இந்தக் கல்வெட்டில் ஸ்வஸ்ஸ்ரீ வீரரா சேந்திர தெவற்கு யாண்டு மங்கலத்து மலையாட்டி சாத்தன் ஆப என்று எழு தப்பட்டுள்ளது. இதன் முழுமையான கல்வெட்டு கிடைக்கவில்லை. இதுகு றித்து தொல்லியல் ஆய்வாளர் மூர்த் தீஸ்வரி கூறுவதாவது : இந்த கல்வெட்டு வீரராசேந்திரன் என்றும், தேவற்கு என் றும், மங்கலத்து மலையாட்டி என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன வெனில், நமது தென்கொங்கு நாட்டுப் பகுதி சேர, சோழ, பாண்டியர் ஆட்சி செய்தமைக்கான பல்வேறு கல்வெட்டு கள் ஆங்காங்கே கிடைத்துள்ளன. அதனை உறுதி செய்யும் வகையில் தான் இந்த கல்வெட்டும் அமைந்துள் ளது. ஏற்கனவே உடுக்கம்பாளையம் பகுதியில் பாண்டியர் பெயர் பொறித்த கல்வெட்டும், கண்ணாடிப்புத்தூரின் பழைய பெயர் வீரபாண்டி சதுர்வேதி மங்கலம் எனும் பழங்காலப் பெயரும் பாண்டியர்கள் ஆட்சி செய்தமைக்கான சான்றுகளாக நாம் கொள்ளலாம். அதே போல் பதிற்றுப்பத்தில் சேரன் செங்குட்டுவனின் கொடி வழி உறவுகள் இங்கு வந்து அயிரை மலையில் வழி பட்டமைக்கான இலக்கியச்சான்றுக ளும் உள்ளது. அதே போல் விக்கிரம சோழன் என்பவன் ஆட்சி செய்தமைக் கான சான்று தான் இன்றைய கல்லா புரம். கல்லாபுரத்தில் பழைய பெயர் விக் கிரம சோழ நல்லூர். கி.பி.1206 முதல் 1250 வரைக்கும் வீரராசேந்திரன் ஆட்சி செய் தமைக்கான சான்றுகள் கடத்தூர் மருதீ சர் கோயில் கல்வெட்டில் ஏற்கனவே உள்ளன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வீரராசேந்திரன் காலத் தைய கல்வெட்டு கிடைத்துள்ளது. இப்போது கிடைத்திருக்கும் இந்த வீரராசேந்திரன் காலத்து கல்வெட்டு வீரராசேந்திரன் ஆட்சி மாண்பினையும், வடகொங்கு தென்கொங்கு என இரண்டு கொங்கு நாட்டையும் ஆட்சி செய்தமைக்கான சான்றுகளாக இத னைக்கருதலாம் என தொல்லியல் ஆய்வாளர் மூர்த்தீஸ்வரி கூறுனார். இந்த ஆய்வுப்பணியில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் அருள்செல்வன், வி.கே.சிவகுமார் மற் றும் வீரய்யன், பல்லடம் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் ஜெய்சிங் ஆகியோரும் ஈடுபட்டனர்.</p>
