தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தந்தை உயிரிழந்த துயரத்திலும் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவர்

25 Mar 2026, 4:19 pm
தந்தை உயிரிழந்த துயரத்திலும்  தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவர்
<p><strong>தந்தை உயிரிழந்த துயரத்திலும் &nbsp;தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவர்</strong></p> <p><strong>எதிர்கால மேற்படிப்புச் செலவுக்கு அரசு உதவுமா?</strong></p> <p>மதுரை, மார்ச் 25- தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு &nbsp;பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் &nbsp;நிலையில், மனித மனதை உலுக்கும் ஒரு &nbsp;சம்பவம் மதுரையில் புதனன்று நடை பெற்றுள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியில் &nbsp;உள்ள செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி யில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன் &nbsp;விக்னேஸ்வரன், புதனன்று &nbsp;நடைபெற்ற &nbsp;கணிதப் பொதுத்தேர்வை எழுதுவதற் காக தல்லாகுளம் பெருமாள் கோவில் &nbsp;அருகிலுள்ள அமெரிக்கன் கல்லூரி பள்ளி தேர்வு மையத்திற்கு வந்தி ருந்தார். இந்த நிலையில் அவரது தந்தை ஆறுமுகம் உடல்நலக் குறைவு காரண மாக திடீரென உயிரிழந்தார். தந்தை யின் மரணச் செய்தியை அறிந்தபோதி லும், மன உளைச்சலை தாங்கிக் கொண்டு &nbsp;தனது கணிதத் தேர்வை முழுமையாக எழுதி முடித்தார் விக்னேஸ்வரன். தேர்வு முடிந்ததும், உறவினர்களுடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளி மாணவனான விக்னேஸ்வரன், தனது பெயரை கூட &nbsp;முழுமையாக சொல்ல முடியாத அள விற்கு நினைவாற்றல் குறைபாட்டுடன் போராடி வருவதாக ஆசிரியர்கள் தெரி விக்கின்றனர். இத்தகைய சவால்களை சந்தித்து வரும் மாணவனுக்கு தந்தை யின் மரணம் மேலும் பெரும் பாதிப்பை &nbsp;ஏற்படுத்தியுள்ளது. &ldquo;இந்த மாணவன் ஏற்கனவே பல சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார். இப்போது தந்தையின் இழப்பு அவரின் கல்வி மற்றும் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. சமூக மும், அரசும் இந்த மாணவனை கவ னத்தில் கொண்டு உதவி செய்ய வேண் &nbsp;டும்&rdquo; என்று ஆசிரியர்கள் தெரிவித்த னர். தந்தையை இழந்த துயரத்திலும் கல்வியை விடாமல் தேர்வு எழுதிய இந்த மாணவனின் நிலை, சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் வகையில் உள்ளது. ஆதரவற்ற நிலையில் இருக் &nbsp;கும் விக்னேஸ்வரனுக்கு அரசு மற்றும் &nbsp;சமூக அமைப்புகள் உடனடி உதவி &nbsp;வழங்க வேண்டியது அவசியமாகி யுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.