தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
13 Nov 2025, 3:30 pm
<p><strong>தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை</strong></p>
<p>தூத்துக்குடி, நவ.13- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆந்திராவைப் போல தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊனத்தின் தன்மையைப் பொறுத்து 6 ஆயிரம், 10 ஆயிரம் ,15 ஆயிரம் எனும் மாத உதவித்தொகையாக வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் சாலமன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட பொருளாளர் கிருஷ்ணகுமார் துணை செயலாளர் மாடசாமி மாவட்ட குழு உறுப்பினர்கள் மணி, மந்திரம் , கனகா, பலவேசமுத்து துணைச் செயலாளர் திருமண செல்வி, பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். </p>
