சென்னையில் மாற்றுத்திறன் மற்றும் மனவளர்ச்சி குன்றிய
14 Mar 2026, 2:57 pm
<p>சென்னையில் மாற்றுத்திறன் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன பயிற்சி மையத்தின் முன்னாள் முதல்வர் எம்.கே.கருப்பையாவின் மூத்த மகள் டாக்டர் கே.சூர்யாவின் 12ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஆஷா ஜானி சாமுவேல் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எல்ஐசி பயிற்சி மைய முன்னாள் முதல்வர் எம்.கே.கருப்பையா, பள்ளி முதல்வர் நளினி, வளர்ச்சி அதிகாரி அய்யாசாமி,சமூக செயற்பாட்டாளர்கள் திலகர், கே.வாசுகிநாதன், சென்னை பல்கலைக்கழக நூலகர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
