திண்டுக்கல் மாவட்டத்தில் 550 சந்தாக்கள் அளிப்பு
18 Jul 2026, 9:50 pm
<p><strong>திண்டுக்கல் மாவட்டத்தில் 550 சந்தாக்கள் அளிப்பு</strong></p><p>திண்டுக்கல் மாவட்டத்தில், முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட 550 தீக்கதிர் சந்தாக்களை, திண்டுக்கல் மாவட்ட தீக்கதிர் பொறுப்பாளர் முத்துச்சாமி, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் க. கனகராஜ், மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோரிடம் வழங்கினர். இந்நிகழ்வில் ஆர். சச்சிதானந்தம் எம்.பி., தீக்கதிர் மதுரைப் பதிப்பு பொதுமேலாளர் ஜோ. ராஜ்மோகன், மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரன், மாநிலக்குழு உறுப்பினர் ஜி. ராணி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், தாலுகா மற்றும் ஒன்றிய, நகரச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.</p>
