தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திண்டுக்கல் தீப வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை!

19 Dec 2025, 10:04 am
திண்டுக்கல் தீப வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை!
<p>திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில்பட்டியில் அமைந்துள்ள மண்டு கருப்பண்ணசாமி கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.<br /> பெருமாள் கோயில்பட்டியில் மண்டு கருப்பண்ணசாமி கோயிலும், அதனை ஒட்டிய பகுதியில் கிறிஸ்தவ தேவாலயமும் அமைந்துள்ளன. இவ்விரு மதத்தினருக்கும் அருகிலுள்ள காலி இடம் தொடர்பாக நீண்ட காலமாக இடப்பிரச்சனை இருந்து வருகிறது.<br /> இந்த நிலையில், மண்டு கருப்பண்ணசாமி கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி சித்திரபால்ராஜ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கோயிலில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.<br /> ஆனால், அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி கிறிஸ்தவ தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உருவானதைத் தொடர்ந்து, பெருமாள் கோயில்பட்டி கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.<br /> இதனைத் தொடர்ந்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.<br /> இந்த தனி நீதிபதி உத்தரவுகளை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதனை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.