இராஜபாளையத்தில் சாதனை படைத்த பெண்களுக்கு “திகழ் விருது”
8 Mar 2026, 3:42 pm
<p><strong>இராஜபாளையத்தில் சாதனை படைத்த பெண்களுக்கு “திகழ் விருது” </strong></p>
<p>இராஜபாளையம், மார்ச் 8- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் மற்றும் ஜே.சி.ஐ. வைமா கல்வி குழுமம் இணைந்து, சர்வதேச மக ளிர் தின விழாவை நடத் தின. ஜே.சி.ஐ. சேர்மன் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். தமுஎகச கிளை தலைவர் கிருஷ் ணன், கிளைச் செயலாளர் மைதிலி கல்யாணி, ஜே.சி.ஐ. ஜோனல் அலு வலர் மாரியப்பன், ஜே.சி.ஐ. மண்டல தலைவர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுஎகச மாவட்டச் செயலாளர் நந்தன் கனகராஜ் துவக்கி வைத்து பேசினார். ராஜேஸ்வரி கோதண்ட ராமன், கவிஞர் ஆனந்தி தமிழ் மற்றும் தமுஎகச மாவட்ட துணைத் தலைவர் சண்முகம் கருத்துரை வழங் கினர். விழாவில் சாதனை படை த்த பெண்களுக்கு “திகழ் விருது” வழங்கப்பட்டது. விருதுகளை மருத்துவர் ராதா, அலையன்ஸ் கிளப் மாவட்ட ஆளுநர் முருகன் ஆகியோர் வழங்கினர். கிளை பொருளாளர் ஹரிஹரகுமார் நன்றி தெரி வித்தார்.</p>
