ஏரியில் இறந்து மிதக்கும் மீன்கள்: அதிகாரிகள் விசாரணை
17 May 2026, 11:10 pm
<p><strong>ஏரியில் இறந்து மிதக்கும் மீன்கள்: அதிகாரிகள் விசாரணை</strong></p><p>தருமபுரி, மே 17- பிடமனேரி ஏரியில் டன் கணக் கில் மீன்கள் இறந்து மிதக்கும் சம்ப வம் குறித்து அதிகாரிகள் விசா ரணை மேற்கொண்டு வருகின்ற னர். </p><p>தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட இலக்கியம்பட்டி ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.</p><p> இந்த வார்டு களில் உள்ள நியூகாலனி, மாந் தோப்பு, ஜெட்டிஅள்ளி, பிடம னேரி, எம்ஜிஆர் நகர், இந்திரா நகர் உள்ளிட்ட ஏழு வார்டுக்குட்பட்ட பொதுமக்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக பிடமனேரி ஏரி உள்ளது.</p><p> தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்கு வருடத்திற்கு ரூ.25 லட்சம் என மீன் பாசிமூலம் வருவாயை ஈட்டி தருகி றது. </p><p>அதேபோல் இரண்டு வருடத் திற்கு முன்பு ரூ.22 லட்சத்திற்கு மீன் பாசி குத்தகை ஏலம் விடப்பட்டது. </p><p>அதன்பின் 2025 ஆம் வருடம் ஏலம் விடாமல் ஏற்கனவே மீன் பாசி குத் தகையை எடுத்த குத்தகைதாரர் மீன்களை பிடித்து விற்று வந்தார். </p><p>இந்நிலையில், தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம் பிடமனேரி ஏரியை மீன் பாசி குத்தகை ஏலம் அறிவிக்காமல், ரகசியமாக மதி கோன்பாளையம் பகுதியை சேர்ந்த நபருக்கு மூன்று வருடத் திற்கு மீன் பாசி குத்தகையை விட் டுள்ளது. </p><p>குத்தகை நபர் தற்போது ஆறு மாத காலமாக மீன்பிடித்து விற் பனை செய்து வந்த நிலையில், ஞாயிறன்று காலை ஏரியில் டன் கணக்கில் மீன்கள் இறந்து மிதந் துள்ளன.</p><p> ஏரியிலிருந்து துர்நாற்றம் வீசவே அருகே சென்று பார்த்த பொதுமக்கள், மீன்கள் இறந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். </p><p>நகராட்சிக்குட்பட்ட ரயில்வே காலனி, டீச்சர்ஸ் காலனி மற்றும் இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நியூ காலனி, மாந்தோப்பு, காளியப் பசெட்டி காலனி, எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வெளி யேறும் கழிவுநீர் ஏரியில் நேரடியாக கலந்து வருகிறது.</p><p> தற்போது மழை இல்லாததால் ஏரி தண்ணீர் மாச டைந்து துர்நாற்றம் வீசி வருவது டன் மீன்கள் இறந்து மிதப்பதால் கடு மையான துர்நாற்றம் வீசி, நோய் தொற்று பரவும் அபாய ஏற்பட்டுள் ளது. </p><p>இந்த தண்ணீரை பயன்படுத் தும் மனிதர்கள், கால்நடைகள், விலங்குகளின் உயிருக்கும் அபா யம் ஏற்படும் நிலையில் உள்ளது. </p><p>இதுகுறித்து அதிகாரிகளுக்கு தக வல் தெரிவித்த நிலையில், யாரா வது முன்விரோதம் காரணமாக தண் ணீரில் விஷம் கலந்தார்களா? அல் லது கழிவுநீரால் தண்ணீர் மாச டைந்து மீன்கள் இறந்தனவா? என்று விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.</p>
