முந்தய பக்கம்

டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி தருமபுரி ஆட்சியரிடம் மக்கள் மனு!

19 May 2026, 12:53 am
டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி தருமபுரி ஆட்சியரிடம் மக்கள் மனு!
<p><strong>டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி தருமபுரி ஆட்சியரிடம் மக்கள் மனு!</strong></p><p>தருமபுரி, மே 18 – தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி மற்றும் பொம்மிடி பகுதிகளில் பொதுமக்கள், மாணவிக ளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளை உட னடியாக அகற்றக் கோரி அப் பகுதி மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சிய ரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். </p><p>மாரண்டஅள்ளி பேரூராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வரும் டாஸ்மாக் கடை எண் 2835-இன் அருகே பள்ளி, கோவில், திரையரங்கு மற்றும் அரசு மருத்துவமனைச் சாலை அமைந்துள்ளன. </p><p>இங்கு மதுப்பிரி யர்களின் கலாட்டாவால் பள்ளி, கல்லூரி மாணவிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.</p><p>இதேபோல், பொம்மிடி - அரூர் பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடை எண் 2875-இன் அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பள்ளிவாசல் மற்றும் கோவில் உள்ளன.</p><p> இக்கடைக்கு வரும் மதுப் பிரியர்கள், வாரச்சந்தை மற்றும் பள்ளிக்குச் செல்லும் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வதால், பெற்றோர் தங்கள் பிள்ளை களைப் பள்ளிக்கு அனுப்பவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது. </p><p>ஏற்கனவே பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால், பொதுமக்களின் நலன் கருதி இந்த இரு டாஸ்மாக் கடைகளை யும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் தங்களது மனுக்களில் வலி யுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram