தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கால்நடை மேய்ச்சலுக்கு அபராதம் விதிப்பதை கைவிடுக

22 May 2026, 11:32 pm
கால்நடை மேய்ச்சலுக்கு அபராதம் விதிப்பதை கைவிடுக
<p><strong>கால்நடை மேய்ச்சலுக்கு அபராதம் விதிப்பதை கைவிடுக</strong></p><p>தருமபுரி, மே 22- வனப்பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு வனத்துறையினர் அபராதம் விதிப்பதை கைவிட நட வடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். </p><p>தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ரெ. சதீஸ் தலைமையில் விவசாயிகள் குறைதீர் வெள்ளியன்று நடைபெற் றது. </p><p>இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயி கள் பேசுகையில், தருமபுரி மாவட் டத்தில் கரும்பு சாகுபடியில் விவ சாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வரு கின்றனர்.</p><p> கரும்பு சாகுபடிக்கான உற்பத்தி செலவு தொடர்ந்து அதிக ரித்து வரும் நிலையில், கொள்மு தல் விலை விவசாயிகளுக்கு கட் டுப்படியாவதாக இல்லை. </p><p>எனவே, கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>கரும்புக்கு விலை நிர்ண யிக்கும் குழுவில் விவசாயிகளை இடம்பெற செய்ய வேண்டும். </p><p>தற் போது அரவை முடிந்த கரும்புக்கு ஊக்கத்தொகை வழங்க வேண் டும். </p><p>மஞ்சள் மற்றும் கடலை சாகு படி அதிகரித்துள்ள நிலையில், விவ சாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். </p><p>பாலக்கோடு, பென்னா கரம், ஒகேனக்கல் வனப்பகுதிக ளில் இயற்கை விவசாயத்திற்கு பயன்படும் 25 ஆயிரம் நாட்டு மாடு கள் மேய்கின்றன. </p><p>வனப்பகுதிக் குள் இந்த மாடுகள் செல்லும் போது வனத்துறையினர் அபராதம் விதிக் கின்றனர். </p><p>இவ்வாறு அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும். </p><p>தருமபுரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஒகேனக்கல் 3 ஆம் கட்ட குடிநீர் திட்டப்பணிகள், ஒகேனக்கல் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம் ஆகியவற்றை விரைவாக தொடங்க வேண்டும். </p><p>மாவட்டத்தில் செயல்படும் 26 உழ வர் உற்பத்தியாளர் நிறுவனங்க ளில் உறுப்பினர்களாக உள்ள விவ சாயிகளுக்கு ஆலோசனைக் கூட் டத்தை நடத்தி வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். </p><p>வரட்டாறு அணையின் பாசன விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, அந்த அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் எடுக்கும் முடிவை கைவிட வேண்டும், என விவசாயிகள் வலியு றுத்தினர். </p><p>இதன்பின் ஆட்சியர் பேசுகை யில், ஒகேனக்கல் குடிநீரை கூடுத லாக வழங்குவதற்கு 3 ஆம் கட்ட குடிநீர் திட்டத்தை ரூ.8651 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>மாநில அர சின் நிதி, ஜப்பான் நாட்டின் நிதியு தவி ஆகியவற்றுடன் ஒன்றிய அரசு நிதி ரூ.2286 கோடியை பெற்று பணி கள் மேற்கொள்ளப்படவுள்ளது. </p><p>உரிய நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும். </p><p>இதேபோல் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல் படுத்துவதற்கான சாத்தியக்கூறு கள் குறித்தும் ஆய்வு நடத்தப் பட்டு வருகிறது.</p><p>வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்கு இடையூறு இல்லாமல் மேயும் மாடுகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக் கையை வனத்துறையினர் தவிர்க்க அறிவுறுத்தப்படும், என்றார்.</p><p> இக் கூட்டத்தில் வருவாய் அலுவலர் கவிதா உட்பட துறை சார்ந்த அதி காரிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.