கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
10 May 2026, 12:34 am
<p><strong>கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்</strong></p><p>தருமபுரி, மே 9- கோடை வெயில் உச்சத்தில் உள்ள நிலையில், வறண் டுள்ள ஏரிகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர். </p><p>தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில் வாணியாறு அணை, வள்ளிமதுரை அணை கால்வாய்கள் மூலம் அரூர், பாப்பி ரெட்டிப்பட்டி பகுதிகளில் உள்ள சில ஏரிகளுக்கு நீர்வரத்து உள்ளது. </p><p>மேட்டுப்பாங்கான பகுதியிலுள்ள கடத்தூர், ராமி யம்பட்டி, மொரப்பூர், சிந்தல்பாடி, பெத்தூர், தீர்த்தமலை, கம் பைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான ஏரிகள் மற்றும் குட்டைகள் உள் ளன.</p><p> இவற்றிற்கு எவ்வித நீர் ஆதாரங்களும் இல்லாததால் பருவ மழையை மட்டுமே நம்பியுள்ளன. கடந்த வருடம் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யாத நிலையில், பெரும்பாலான ஏரிகளில் நீர் இருப்பு இல்லை. </p><p>மேலும், ஏரிகளுக்கு நீர் வரும் கால்வாய்கள் முழுவ தும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாலும், ஏரிகளில் முழுமையாக ஆக்கிரமித்து இருக்கும் சீமை கருவேல மரங்களாலும், வறண்ட நிலையிலேயே ஏரிகள் உள்ளன. </p><p>எனவே, கோடை வெயில் உச்சத்தில் உள்ள நிலையில், நீரின்றி வறண்டு இருக் கும் ஏரிகளில், சீமை கருவேல மரங்கள் மற்றும் நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி விவசாயி கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
