தருமபுரி மாவட்டம், ஏமனூர் கிராம மக்களுக்கு நூறு
11 Jun 2026, 11:16 pm
<p>தருமபுரி மாவட்டம், ஏமனூர் கிராம மக்களுக்கு நூறு நாள் வேலை கேட்டு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஏரியூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வியாழனன்று மனு அளித்தனர். இந்நிகழ்வில், சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் என்.பி.முருகன், ஏரியூர் ஒன்றியச் செயலாளர் ஏ.அசோகன், ஒன்றியப் பொருளாளர் ரங்கப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.தங்கராஜ் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.</p>
