தர்மசாலாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் பீதியில் இமாச்சல்
6 Jun 2026, 9:19 pm
<p><strong>தர்மசாலாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் பீதியில் இமாச்சல்</strong> </p><p>இமயமலைச்சாரலில் உள்ளது தர்மசாலா (இமாச்சல பிரதேச மாநிலம்). இது நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். இந்நிலையில், வெள்ளியன்று இரவு முதல் தர்மசாலா பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு, இமாச்சல் மக்க ளை பீதியில் ஆழ்த்தி வருகிறது.</p><p>இதில் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவான மிக தீவிரமான நிலநடுக்கமும் பதிவாகி யுள்ளது. இதுதொடர்பாக இமாச்சல் வருவாய் துறையினர் கூறுகையில்,“தர்ம சாலாவில் ஜூன் 5 அன்று நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து தாக்கியுள்ளன.</p><p>இதில் மிக வலுவான நிலநடுக்கம் இரவு 10:04 மணிக்கு ஏற்பட்டது. இதன் மையப் புள்ளி தர்மசாலாவிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில், காங்ரா - சம்பா எல்லை யில் உள்ள தவுலாதர் மலைத்தொடரில் இருக்கும் தார் கடோய், குக்தி காப்புக் காடுகளுக்கு இடையே அமைந்தி ருந்தது.</p><p>எனினும் இந்த நிலநடுக்கங்க ளால் எவ்வித உயிர்ச்சேதமோ, பெரிய அளவிலான சொத்துச் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை” என்று சனியன்று தெரிவித்தனர்.</p>
