திண்டுக்கல் மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள், கல்விக் கடன் வழங்கும் விழா
28 Nov 2025, 2:28 pm
<p><strong>திண்டுக்கல் மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள், கல்விக் கடன் வழங்கும் விழா</strong></p>
<p>ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., தொடங்கி வைத்தார் திண்டுக்கல், நவ.28 - திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மாநக ராட்சி துவக்கப் பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் உயர் கோபுர மின் விளக்கை ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. தொடங்கி வைத்தார். திண்டுக்கல் ஆர்.எம். காலனி அருகேயுள்ள பாலதிருப்பதியில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளி சுற்றுச்சுவருக்கு, மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து பணிகள் நிறைவடைந்த பள்ளியின் சுற்றுச்சுவரை வெள்ளியன்று ஆர். சச்சிதானந்தம் எம்.பி. திறந்து வைத்தார். இதேபோல் அங்குவிலாஸ் சாலையில் திண்டுக்கல் நாடாளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுர விளக்கையும் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திண்டுக்கல் மாவட்டச் செயலா ளர் கே.பிரபாகரன், மாநகரச் செய லாளர் ஏ.அரபு முகமது, மாவட்டக் குழு உறுப்பினரும் அப்பகுதியின் மாமன்ற உறுப்பினருமான கே.எஸ். கணேசன் மற்றும் அப்பகுதி திமுக, சிபிஎம் மற்றும் கூட்டணிக் கட்சி யைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ரூ.5.41 கோடி கல்விக் கடன் வழங்கல் வியாழனன்று திண்டுக்கல் ஜி.டி.என். கலைக் கல்லூரியில் கல்விக்கடன் வழங்கும் விழா நடை பெற்றது. இவ்விழாவில் 154 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.5.41 கோடி மதிப்பிலான கல்விக் கடன் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மக்க ளவை உறுப்பினர் ஆர்.சச்சிதா னந்தம் எம்.பி, மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் ஆகியோர் கல்விக் கடன் நிதியை வழங்கினர். உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோ தினி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ர.கீர்த்தனா மணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆர்.சிவக்குமார் உட்பட அரசு அலுவலர்கள், உயர்கல்வி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.</p>
