தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நேரடி நெல் கொள்முதல் நிலையம்: தேவதானம் பகுதியில் திறக்க கோரிக்கை

11 May 2026, 11:42 pm
நேரடி நெல் கொள்முதல் நிலையம்: தேவதானம் பகுதியில் திறக்க கோரிக்கை
<p><strong>நேரடி நெல் கொள்முதல் நிலையம்: தேவதானம் பகுதியில் திறக்க கோரிக்கை</strong></p><p>விருதுநகர், மே 11- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவதானம் பகு தியில் உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. </p><p>இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா விடம் மனு அளிக்கப்பட்டது.</p><p> அந்த மனு வில் கூறப்பட்டதாவது: இராஜபாளையம் வட்டம் தேவதானம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகு படி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் தனியார் வியாபாரிகள் மற்றும் புரோக்கர் கள் குறைந்த விலைக்கு நெல்லை வாங்க முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. </p><p>மேலும் மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரப் பகுதிகளில் விவசாயம் அதிக அள வில் நடைபெற்று வருவதால், யானை, காட்டுப் பன்றி, காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் நெற்பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரி வித்துள்ளனர். </p><p>எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தேவதானம் பகுதியில் உடனடியாக அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. </p><p>முன்னதாக மாவட்ட ஆட்சியரை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.முருகன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பி னர் ஏ.ராமர், ஒன்றியச் செயலாளர் வன ராஜ், பால்சாமி, மாரிமுத்து உள்ளிட்டோர் நேரில் சந்தித்து மனுவை வழங்கினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.