காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட கோரிக்கை
20 Feb 2026, 2:39 pm
<p><strong>காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட கோரிக்கை</strong></p>
<p>நாகப்பட்டினம், பிப்.20 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, சட்டமன்றத்தில் பிப்.20 (வெள்ளிக் கிழமை) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, பயிர்களை காப்பாற்ற காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி மனுவை அளித்தார். அந்த மனுவில், “டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மேட்டூர் அணையி லிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஒவ்வொரு ஆண்டும் ஜன.28 ஆம் தேதியோடு நிறுத்தப்படும். அதே போன்று, இந்த ஆண்டும் ஜன.28 ஆம் தேதியோடு நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது டெல்டா மாவட்ட விவ சாயிகள் பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் பின்தங்கிய நிலை யில் உள்ளன. போதிய தண்ணீர் வசதி இல்லாததால் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் மிக வும் பாதிப்படையும் நிலை உள்ளது. எனவே, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட்டு, தமிழக முதல்வர், விவசாயிகளின் நெற்பயிர் களை பாதுகாக்க வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
