சாதிய பாகுபாடுகளை தடுக்கக் கோரிக்கை
3 Feb 2026, 4:00 pm
<p><strong>சாதிய பாகுபாடுகளை தடுக்கக் கோரிக்கை</strong></p>
<p>நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதிய பாகுபாடுகளை தடுக்க வேண்டும், ரோஹித் வெமுலா சட்டத்தை இயற்ற வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று (பிப்.3) தரமணி டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் கிளைத் தலைவர் சக்திபிரியன் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.மிருதுளா, தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.ஆனந்தகுமார், கிளைச் செயலாளர் ஆர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.</p>
