கல்வராயன்மலையில் காவல்துறைக்கு கடும் பணிச்சுமை: சேராப்பட்டில் புதிய காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
30 Jun 2026, 12:06 am
<p><strong>கல்வராயன்மலையில் காவல்துறைக்கு கடும் பணிச்சுமை: சேராப்பட்டில் புதிய காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை</strong></p><p>கள்ளக்குறிச்சி, ஜூன் 29- கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வ ராயன்மலை ஒன்றியத்தில் சுமார் 40 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். </p><p>இப்பகுதியில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க ஒரே ஒரு காவல் நிலையம் மட்டுமே செயல்பட்டு வருவதால், அங்குள்ள காவலர்கள் கடும் பணிச்சுமைக்கு உள்ளாகியுள்ளனர். </p><p>பொதுமக்களின் பாதுகாப்புத் தேவையை முன்னிட்டு, இப்பகுதியில் கூடுதல் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. </p><p>142 கிராமங்களுக்கு ஒரு காவல் நிலையம் கரியாலூரில் உள்ள ஒரே ஒரு காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில், 13 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 142 கிராமங்கள் உள்ளன. </p><p>இந்த காவல் நிலையத்தின் எல்லை சுமார் 70 கி.மீ சுற்றளவு கொண்ட மலைப்பகுதியை உள்ளடக்கியது.</p><p> இவ்வளவு பெரிய பரப்பளவைக் கண்காணிக்க, ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் உட்பட வெறும் 15 காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.</p><p> புகார் அளிப்பதில் சிக்கல் மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள், புகார் அளிக்க கரியாலூர் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமானால், 30 முதல் 40 கி.மீ தொலைவு கொண்ட கடினமான மலைப்பாதைகளைக் கடக்க வேண்டியுள்ளது. </p><p>பொதுப்போக்குவரத்து வசதி போதிய அளவில் இல்லாததால், பல நேரங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளிக்காமலேயே திரும்பும் சூழல் உள்ளது. </p><p>காவல்துறைக்கும் தூரமான இடங்களுக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது. </p><p>குற்றச்செயல்கள் அதிகரிக்கும் அபாயம் போதிய காவலர்கள் இல்லாததால், இரவு நேர ரோந்துப் பணிகளை மேற்கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. </p><p>இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி, மலையின் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. </p><p>மேலும், திருவிழாக் காலங்கள், சாலை மறியல் அல்லது ஆர்ப்பாட்டங்களின்போது போதிய பாதுகாப்பு வழங்க முடியாத சூழல் உள்ளது. </p><p>புதிய காவல்நிலையத் தேவை இச்சீர்க்கேட்டைச் சரிசெய்ய, கரியா லூர் காவல் நிலையத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என மலைவாழ் மக்க ளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். </p><p>வஞ்சிக்குழி, கிளாக்காடு, இன்னாடு உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கி, சேராப்பட்டைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய காவல் நிலையத்தை உரு வாக்க வேண்டும் என்பது அவர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. </p><p>புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டால், காவலர்களின் பணிச்சுமை குறைவதோடு, மலைவாழ் மக்களுக்கு உடனடி பாதுகாப்பு கிடைப்ப தையும், குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப் படுவதையும் உறுதி செய்ய முடியும்.</p><p> எனவே, மாவட்டக் காவல்துறையும் தமிழக அரசும் இப்பிரச்சினையில் உடன டியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
