தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அடக்குமுறையை ஏவிய தில்லி போலீஸ் தேசத்தின் முன்பு அம்பலப்பட்டு நிற்கிறது!

22 Jul 2026, 8:53 pm
அடக்குமுறையை ஏவிய தில்லி போலீஸ் தேசத்தின் முன்பு அம்பலப்பட்டு நிற்கிறது!
<p><strong>அடக்குமுறையை ஏவிய தில்லி போலீஸ் தேசத்தின் முன்பு அம்பலப்பட்டு நிற்கிறது!</strong></p><p>தேசியத் தேர்வு முகமையின் (NTA) வினாத்தாள் கசிவு ஊழல்கள், கல்வித்துறையில் கட்டவிழ்ந்துள்ள அதிதீவிர தனியார்மயமாக்கல் மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராகத் தில்லியில் நடைபெற்ற மாபெரும் ‘நாடாளு மன்ற முற்றுகைப் போராட்டம்’ இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கொடூரமான அடக்குமுறை நாளாக மாறியுள்ளது. ஜூலை 20 அன்று ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளு மன்றத்தை நோக்கித் திரண்டு சென்ற ஆயிரக் கணக்கான மாணவர்கள் மற்றும் இளை ஞர்கள் மீது தில்லி காவல்துறையும், துணை ராணுவப் படைகளும் இணைந்து நடத்திய காட்டு மிராண்டித்தனமான தடியடி, கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு மற்றும் கொடூரத் தாக்குதல்கள் தில்லியை ஒரு போர்க்களமாக மாற்றின. </p><p>இப்போராட்டத்தை ஒடுக்க மோடி அரசு கட்டவிழ்த்துவிட்ட பாசிச வன்முறைகளின் கோர முகத்தை ஊடகத் தரவுகளும் கள ஆய்வுகளும் அம்பலப்படுத்தியுள்ளன.</p><p><strong>மருத்துவமனைகளில் கதறும் இளைஞர்களும், அம்பலப்பட்ட காவல்துறை அத்துமீறல்களும்</strong></p><p>போராட்டக் களத்தில் காவல்துறை நடத்திய கொடூரத் தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தில்லியின் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை மற்றும் லேடி ஹார்டிங்கே மருத்துவமனையின் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். பெரும்பாலான இளைஞர்களின் தலை மற்றும் கைகால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன.</p><p>மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இளம் போராட்டக்காரர்களின் குரல்கள் மோடி அரசின் எதேச்சதிகார முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. பிரக்யா ராஜைச் சேர்ந்த 21 வயது மாணவி அல்ஃபியா, தனது காலில் கட்டுகளுடன் குளிரால் நடுங்கியபடியே, “நான் காவல்துறையினரிடம் அடிபட்டு கிடக்கிறேன். என் கனவுகள் செத்துவிட்டன. இந்த அரசாங்கத்தின் ஏவலர்களாக இருக்கும் காவல்துறையில் என் தந்தை வேலை செய்கிறார்; அவரிடமே இனி இந்தப் பணியை விட்டுவிட்டு வெளியேறுமாறு கூறிவிட்டேன். மக்களுக்காகக் குரல் கொடுக்கும் குழந்தைகளை அடித்துத் துவைக்கும் அந்தச் சீருடை எனக்குத் தேவையில்லை” என்று கதறியது நெஞ்சை உருக்கும் காட்சியாக இருந்தது.</p><p>பரீதாபாத்தைச் சேர்ந்த 26 வயது வாலிபர் விஷால் பாண்டே, “நாங்கள் அமைதியான முறையில் உரிமைக் குரல் எழுப்ப வந்தோம். ஆனால் காவல்துறையினர் தடியால் கண்மூடித் தனமாக எங்கள் கால்களில் தாக்கினர். தடுப்பு களில் சிக்கித் தப்பியவர்களையும் விடாமல் துரத்தி அடித்துச் சித்ரவதை செய்தனர்” எனத் தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தின் சந்தௌலி மாவட்டத்திலிருந்து வந்த அமித் குமார் என்பவரின் வலது கைச் சதை முற்றிலுமாகக் கிழிந்த நிலையில் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்தார்.</p><p><strong>‘பெல்லட்’ கன் தாக்குதல்: தில்லியில் அரங்கேறிய காஷ்மீர் பாணி அடக்குமுறை!</strong></p><p>இப்போராட்டத்தின் போது தில்லி காவல்துறையினரும், மத்திய ரிசர்வ் காவல்துறை யின் அதிரடிப் படைகளும் வழக்கமான தடியடிகளைத் தாண்டி, காஷ்மீர் மற்றும் மணிப்பூர் கலவரங்களின் போது பயன்படுத்தப் பட்ட கொடூரமான ‘பெல்லட் கன்’ (Pellet Guns) மற்றும் அதிர்வுத் தடிகளையும் (Shock batons) ஏவப்பட்டுள்ளது தற்போது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.</p><p>குர்கானில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரான ஷைக் இர்ஷாத் மன்சூரி என்ற போராட்டக்காரர், கன்னாட் பிளேஸ் மற்றும் பாளிகா பஜார் பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். லேடி ஹார்டிங்கே மருத்துவமனையில் தீவிர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவரது முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் 30 முதல் 40 குண்டுத் துகள்கள் (Pellets) துளைத்திருந்தன. மருத்துவர்கள் போராடி பல குறு குண்டுகளை வெளியே எடுத்தாலும், இரத்த நாளங்களுக்கு மிக அருகில் கழுத்தில் ஆழமாகப் பதிந்திருந்த ஒரு குண்டை எடுக்க முடியாத அவலநிலை ஏற்ப ட்டுள்ளது. </p><p>அறுவை சிகிச்சையின் போது இர்ஷாத்திற்கு கண் பார்வை இழக்க நேரிடலாம் என்றும், அதற்கு மருத்துவமனை பொறுப்பல்ல என்றும் கூறி அவரது நண்பரிடம் வற்புறுத்தி கையெழுத்து பெறப்பட்டுள்ள கொடுமையும் நடந்துள்ளது. கன்னாட் பிளேஸ் பகுதியில் போராட்டம் நடைபெற்ற போது, சுமார் 40-50 மீட்டர் தொலைவில் நின்ற விரைவு அதிரடிப் படை வீரர் ஒருவரால் இந்தத் தாக்குதல் நடத்தப் பட்டதாக இர்ஷாத்தின் நண்பர் கூறியுள்ளார். </p><p>தலைநகர் தில்லியின் மையப்பகுதியில் பொதுமக்களுக்கு எதிராகப் பெல்லட் கன் பயன்படுத்தப்பட்டுள்ளது ஒட்டுமொத்த ஜன நாயக சக்திகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியு ள்ளது. </p><p><strong>பாஜகவை ‘பாதுகாத்த’ ஊடகங்கள் </strong></p><p>இதனிடையே செவ்வாய்க்கிழமை லேடி ஹார்டிங் மருத்துவமனைக்கு சென்ற ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா, காயமடைந்த இர்ஷாத்தை நேரில் சந்தித்தார். அப்போது நாட்டின் கல்வி மற்றும் இளைஞர்களின் நிலை குறித்து அரசின் செயல்களில் தனக்குள்ள அதிருப்தி காரணமாகவே போராட்டத்தில் கலந்துகொண்டதாக இர்ஷாத் அவரிடம் தைரியமாக கூறியுள்ளார். எனினும், ஏஎன்ஐ உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட அந்த வீடியோவில் எந்தவித ஒலியும் இடம்பெறவில்லை. மேலும், இர்ஷாத்தின் காயங்கள் தெளிவாகத் தெரியாதவாறு அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது. இது பாஜக அரசை பாதுகாக்கும் ஊடகங்களின் அடிமைத்தனம் என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.</p><p><strong>அம்பலமான பொய் மூட்டைகள்</strong></p><p>போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய வன்முறைகளை மூடிமறைக்க தில்லி காவல்துறையும், ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகமும் தீவிரமான பொய் மூட்டை களை அவிழ்த்து விட்டன. போராட்டக்காரர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்ட காணொ லிகளில், ஆணிகள் பொருத்தப்பட்ட கொடூர மான தடிகளுடன் (Batons with nails) காவல்துறை யினர் வலம் வந்ததை அம்பலப்படுத்தியபோது, அது “போராட்டத்துடன் தொடர்பில்லாத பழைய காணொலி” என்றும் “போலிச் செய்தி” என்றும் காவல்துறை உடனடியாக மறுப்பு அறிக்கை களை வெளியிட்டது.</p><p>எனினும், ‘ஆல்ட் நியூஸ்’ (Alt News), ‘பூம்’ (BOOM) மற்றும் சுயேச்சை ஊடகங்களின் துல்லியமான மெட்டாடேட்டா பகுப்பாய்வு (Metadata analysis) மற்றும் நேரடி சாட்சிகளின் சாட்சியங்கள் மூலம், அந்த வீடியோக்கள் ஜூலை 20 அன்று ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் பதிவு செய்யப்பட்டவைதான் என்பது திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. முறை யான அனுமதி மறுக்கப்பட்டு, 6 அடி உயர இரும்புத் தடுப்புகள் பற்றவைக்கப்பட்டு மூடப்பட்டி ருந்த மையப் பகுதியில், கூடுதல் காவல்துறை ஆணையர் சந்தீப் லம்பா உட்பட பல உயர் அதி காரிகளே பெண் போராட்டக்காரர்களை முகத்தில் அறைந்தும், கொடூரமாகத் தாக்கியும் உள்ள காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><p><strong>நாடாளுமன்ற வாயில்களை மூடி ஜனநாயகத்தை மூச்சுத் திணற வைக்கும் மோடி அரசு</strong></p><p>ஜந்தர் மந்தர் முதல் நாடாளுமன்றம் வரை பல அடுக்குக் காவல்துறைத் தடுப்புகள், 16-க்கும் மேற்பட்ட மெட்ரோ நிலையங்கள் மூடல், மத்திய தில்லியில் செல்போன் இணைய சேவைகள் துண்டிப்பு என ஒரு சர்வாதிகார நாட்டுக்குரிய அத்தனை குணங்களையும் மோடி அரசு வெளிப்படுத்தியுள்ளது.</p><p>எனினும் மோடி அரசின் பாசிச முகத்திற்கு எதிராக நாட்டின் இளைஞர்களும் மாணவர் களும் துணிச்சலாக வீதிகளில் இறங்கி நடத்தும் இந்தச் சமரசமற்ற போராட்டம் இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.&#173;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.