கரப்பான்பூச்சி போராட்டம் தில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
23 Jul 2026, 9:08 pm
<p><strong>கரப்பான்பூச்சி போராட்டம் தில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை</strong> </p><p>கரப்பான்பூச்சி போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி, வழக்கறி ஞர் வருண் குமார் சின்ஹா தாக் கல் செய்த பொதுநல வழக்கு தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர் வில் வியாழனன்று விசாரணைக்கு வந் தது. அப்போது வழக்கறிஞர் வருண் குமார் சின்ஹா,”தில்லியில் நடப்பது ஒரு போலி மாணவர் போராட்டம். அவர்கள் ஒட்டுமொத்த தில்லியையும் பணயக் கைதிகளாக வைத்துள்ளனர். சாலைகள் தடைபட்டுள்ளன. தில்லி குடிமக்கள் அவ திப்படுகின்றனர். இதனால் இந்த வழக்கை விரைவில் பட்டியலிட வேண் டும்” என்று அவர் வாதிட்டார். இந்த வாதத்தை தொடர்ந்து தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா, நீதிபதி தேஜாஸ் காரியா அமர்வு.”உங்கள் வாதத்தை ஏற்றுக் கொள்கிறோம். வெள்ளியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படும்” என்று தெரிவித்தார்.</p>
