முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

7 Jul 2026, 9:45 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்
<p><strong>கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே</strong></p><p>எங்களுடைய அசல் டுவிட்டர் எக்ஸ் கணக்கான @CJP_2029 பக்கத்தின் முடக்கத்தை நீக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வெற்றி கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு மட்டுமானது அல்ல; மாறாக கருத்துச் சுதந்திரத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும். இளைஞர்களின் குரலை நாங்கள் தொடர்ந்து ஓங்கி ஒலிப்போம்.</p><p><strong>அவுட்லுக் நிறுவனர் சபீர் பாட்டியா</strong></p><p>ஒன்றிய அரசு ‘துரந்தர்’ திரைப்படத்தை அனுமதிக்கும் போது, ‘சட்லஜ்’ திரைப்படத்தையும் அனுமதிக்க வேண்டும். ஒரு ஜனநாயகம் என்பது மாற்றுக்கருத்துக்கள் அல்லது போட்டி கருத்துக்களுக்கு அஞ்சக்கூடாது. மக்கள் எதையும் பார்க்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும், தங்களுக்குள் முடிவெடுக்கவும் அனுமதிக்க வேண்டும்.</p><p><strong>ஸ்பானிஷ் நடிகர் ஜாவியர் பார்டெம்</strong></p><p>அமெரிக்க ஜனாதிபதி ‘நான் தான் இந்த உலகின் மன்னர்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். போர்களில் தலையிடுவது போல உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்குள்ளேயும் நுழைந்து ரெட் கார்டு விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்கா உலகக்கோப்பை போட்டியை நடத்தலாம்; ஆனால் அதில் தலையிட உரிமை இல்லை.</p><p><strong>காங்கிரஸ் பொதுச்செயலாளர் பூபேஷ் பாகேல்</strong></p><p>ராமர் கோவிலுக்கான பூமி பூஜை, குடமுழுக்கு விழாக்களையும் பிரதமர் மோடி தான் முன்னின்று நடத்தினார். அதற்கான அறக்கட்டளைகளை அமைப்பதில் அவர் முக்கியப் பங்காற்றினார். ஆனால் ராமர் கோவில் நன்கொடை முறைகேடு புகார் விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்?</p>
Share
FacebookXWhatsAppTelegram