சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கருத்துக்கு எதிராக முகநூலில் அவதூறு பதிவு
9 Dec 2025, 4:25 pm
<p><strong>சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கருத்துக்கு எதிராக முகநூலில் அவதூறு பதிவு</strong></p>
<p>பதிவிட்ட நபர் மீது காவல் நிலையத்தில் புகார் மயிலாடுதுறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “பாஜக - அதிமுக அணியை தோற்கடிப்பதுதான் 2026 சட்டமன்றத் தேர்த லில் எங்களுடைய முதன்மையான பணி. எங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு திமுக எங்களுக்கு துணை நிற்கிறது. ஆட்சி அதிகாரத்தில் எப்போதுமே நாங்கள் பங்கு கேட்க மாட்டோம்” என கடந்த வாரத்தில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி முகநூலில் பகிரப்பட்டது. இந்நிலையில் அந்த கருத்தை விமர்சனம் செய்கிற பெயரில், மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகிலுள்ள கருவாழக்கரை மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த வல்லரசு என்பவர் மிகவும் ஆபாசமாக கொச்சையாக பதி விட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். துரைராஜ், ஒன்றியச் செயலாளர் கே.பி. மார்க்ஸ் மற்றும் கட்சியினர் “Admk arasu” என்ற பெயரில் முகநூலில் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பதிவிடும் வல்லரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செம்பனார்கோ வில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.</p>
